செவ்வாய், 30 நவம்பர், 2010

நட்சத்திரங்கள் நடுவே உனக்கொரு வீடு

ஒரு
----
ரோஐh செடி வழர்த்து வருகிறேன்
...-----------------------------------
ஓவ்வொரு நாளும் தண்ணீரும் ஊற்றிவருகிறேன்
------------------------------------------------
இதுவரை ஒரு பூ தந்ததில்லை… ஆனால்
--------------------------------------- --
நீ எப்படி
------------
பார்க்கும் போதெல்லாம்
-------------------------
ரோஐவாகவே இருக்கிறாய்…..
----------------------------------


வளையல் கடைக்காரனை திட்டினேன்.
------------------------------------
அழகான உன் கைகளுக்கு
--------------------------
பொருத்தமான வளையல்களை
---------------------------------
வீதியில் வெய்யிலில்
---------------------
போட்டு விற்க்கிறான்.
------------------------


கனவில் நீ
-------------
வந்து போனால் - நான்
------------------------
காலையில் தலையனை
------------------------
அருகில் தேடுகிறேன.;
----------------------
தவறிவிழுந்திருக்குமென
-----------------------
உன் கொலுசுகளை….
--------------------


நீ
---
எனக்காக
-----------
ஓரு பொய் சொல்லு….
--------------------
என்னைக் காதலிக்கவில்லை என்று….
-----------------------------------------


நெடுந்தீவு – முகிலன்.

எனது நகரத்து வாழ்க்கை.

சீரியல் பார்ப்பதற்காய்
---------------------
அம்மாவுக்கு - ஒரு
---------------------
தொலைக்காட்சிப்பெட்டி.
------------------------

வயதாகிப்போன
---------------
அப்பாவுக்கு - நின்மதியாய்
---------------------------
தூங்கிக்கொள்ள ஒரு மின் விசிறி…
---------------------------------

அக்காவுக்கு ஏ.சி றூமும்
-------------------------
அரட்டை அடிக்க
---------------
தொலைபேசியும்….
--------------------

தம்பிக்கு கடைசியாய் வந்த
-----------------------------
கம்பியூட்டரும்
----------------
கலர்கலரான மின்குமிழ்களும்…
-----------------------------

தங்கைக்கு
--------------
கட்டாயம் தேவையான – ஒரு
----------------------------
மின் அழுத்தி
-----------

வேலைக்காரிக்கு
--------------------
கிரேண்டரும் போதாதென்று…
-----------------------------
வோசிங் மிசினும்.
--------------------

எனக்கு என்ன தெரியுமா…?
--------------------------

மாதம் முடிவில்
----------------
வீடு தேடி வரும்
---------------
மின் வரி பில்
-------------
மாத்திரமே…..
----------
நெடுந்தீவு – முகிலன்

என் நகரத்துப் பிரயாணம்

*

சாலை ஒரத்து
----------------
குப்பைத்தொட்டிக்குள்
---------------------
துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது.
-----------------------------------------

போபவர்கள் வருபவர்கள்
------------------------
எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டும்….;
--------------------------------------------
எச்சிலைத் துப்பிக் கொண்டும்….
----------------------------
சுயநலமாக நகர்கிறார்கள்.
--------------------------

ஒருவரேனும்
---------------
நின்று நிதானித்துப் போவதாய்
------------------------------
நான் அவதானிக்கவில்லை…
------------------------------

நாற்றம் என்
--------------
மூக்கையும் தைத்தது.
---------------------
நாக்கையும் பிய்த்தது.
-------------------------

வாடிய வாழை
---------------
இலையில் சுற்றப்பட்ட …
-------------------------
எலும்புகள் தெரியும் படியான…
-------------------------------
போசாக்கு குறைந்து போனதான…ஒரு
----------------------------------
பிஞ்சுக் குழந்தையின்
-------------------------
நிர்வாணமான காய்ந்த சடலம்.
------------------------------

தொப்பிள் கொடியின்
------------------------
துவாரத்திலும்……
----------------
உதடுகளின் ஈரத்திலும்….
---------------------
பால் உறுப்பிலும்…
------------------
மல வாசலிலும்…ஈக்கள்
----------------------------
இரை திரட்டிக் கொண்டிருந்தன.
------------------------------

இரக்கமில்லாமல் ஏன் தானோ..?
----------------------------------
குழந்தை குப்பைத்தொட்டிக்குள்
------------------------------
வீசப்பட்டது.
-----------

வறுமையின் கொடுமையால்…
--------------------------
வீசப்பட்டிருக்கலாம்.
--------------------
முறைதவறிப்பிறந்ததாலும்….
-------------------------------
வீசப்பட்டிருக்கலாம்.
-------------------------
முடமாக பிறந்ததாலும்..
-----------------------
வீசப்பட்டிருக்கலாம் - அல்லது போனால்
-------------------------------------------
பெண்ணாய் பிறந்ததாலும்..
-------------------------
வீசப்பட்டிருக்கலாம்.
--------------------

கேள்விகள் மட்டுமே
---------------------
வரிசையாய் எழுந்தன.
----------------------
பதில்களைத் தவிர…
---------------------.

சடலத்தை அடக்கம்
-------------------
செய்யயாவது.
---------------
யார்… தான்…முன்வருவார்களோ…?
---------------------------------

இனி நாளை..
--------------
காலை தானே வரும்.
--------------------------
“மாநகர சபைக் குப்பைலாறி”
---------------------------------

எனது 5வது கவிதைத்தொகுதி
****************************
“அகதியின்முகம்”இல்இருந்து
****************************** நெடுந்தீவு – முகிலன்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா….

தொண்ணுற்றி ஐந்து பேர் கொண்ட அமைச்சரவையில் முஸ்லீம் கொங்கிரஸைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். ஒருவர் தலைவர் ரவூப் ஸ+க்கீம்.அடுத்தவர் தவிசாளர் சேகுகாவூத் பஸீர்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு – அவருடைய விருப்பங்களுக்குமான அரசியலுக்கு ஆதரவளிக்கும் பேரில் - நாடாளுமண்ற உறுப்பினர்களில் ஐ.தே.க இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீரங்காவும், ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவர்களில் ஒருவரான பிரபா கனேசனும் அடங்குவர்.

இதைத்தவிர - இலங்கையின் ஐனநாயகத்துக்கு உயிரூட்டப்போகிறோம் என்று, குடும்ப ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்க்கப் போகிறோம் என்று முழங்கிய தேர்தல் கால புரட்சியாளர்களில் கணிசமானவர்கள் இப்போது மகிந்த ராஜபக்ஸ+வின் அரசாங்கத்தில் அமைச்சர்களும் அங்த்தவர்களாவும் ஆகிவிட்டனர்.

இவ்வளவிற்கும் மகிந்த ராஜ பக்சவின் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் இருந்ததைப்போல , அதன் தொடர்சியைப் பின்பற்றியவாறே இருக்கிறது. அல்லது அது இன்னும் தன்னை வலுவாக – தனது தளத்தில் ஸ்தாபிக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.



இப்போது நாமலைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை ஒரு மூத்த அரசியல் வாதியையும் விட அதிகம் அறிமுகமானவராகவும் செல்வாக்க உடயவராகவும் நாமல் இருக்கிறார். நாமலுடன் தோழமை கொள்வதற்க்காக மூத்த அரசியல் வாதிகள் பலரும் போட்டி போடுகிறார்கள்.

ஆகையால் ராஜ பக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் மேலும் பலமாகியுள்ளது. அவருடைய அரசாங்கத்தின் ஏனைய நடைமுறைகளிலும் வேறுபாடுகள் இல்லை. இந்த நிலையிலேயே எதிர்தரப்புகளிடமிருந்த பலரும் இப்போது அரசாங்கத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

இதுதான் வியப்பூட்டுவது. இதில் முக்கியமான ஒருவர் ரவூப் ஸ+க்கீம். ஒரு அணி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலிலும் சரி, நாடாளுமண்ற தேர்தலிலும் சரி முஸ்லீம் காங்கிரஸ் கொண்டிருந்த நிலைப்பாடும் விடுத்திருந்த அறிவுப்புகளும் மகிந்த அரசாங்கத்தை முற்றாக நிராகரிப்பதாகவே இருந்தன.

அவ்வாறே பிரபா கனேசன், ஸ்ரீரங்கா, மற்றும் மலையகக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் அறிவிப்பகளும் இருந்தன. இதில் மிச்ச உச்சமாக ஸ்ரீரங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளராக இருக்கம் கவிஞர் சேகுதாவூத் பஸீரின் கருத்துகள் இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும். ஏழு அறிவு ஜீவியாகவும் ஜனநாயக விழுமியங்களுக்காகப் போராடும் பாஸீர் பல பேட்டிகளில் கருத்துத் தெரிவித்தார்.

அப்போது இவர்கள் முன்நிறுத்திய ஒரு கேடயம் ஜெனரல் சரத்பொன்சேகா. வலுவிற்றிருந்தோருக்கெல்லாம் ஒரு ஆயுதமாக சரத் பொன்சேகா பயன்படுத்தப்பட்டார். சரத் பொன்சேகா ஆயுதங்களை பயன்படுத்துவதில் ஒரு திறமையள்ள ஒரு தளபதியாக இருக்கலாம். போரில் வெற்றியையும் சாதகங்களை நிகழ்தும் ஒரு வீரனாகவும் இருக்கலாம்.

ஆனால் அரசியலில் அவரை மற்றவர்களே ஆயுதமாக்கினார்கள். அரசியலில் அவர் வெற்றி பெறுவதற்கு கடினமான ஒருவராகவே இருக்கிறார்.

எப்படியோ ஜனாதிபதி தேர்தலின் போது, ஸ+க்கீம்,ரணில்,சோமவன்ஸ,போன்ற அத்தனை பேருக்கம் சரத் என்ற ஆயுதம் அவசியமாக்கப்பட்டது.

இப்போது சரத்பொன்சேகாவுக்கு ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் ஸ+க்கீம், பஸீர், ரங்கா, பிரபாகனேசன், உள்ளிட்ட ஐ.தே.க காரர்கள் சிலர் என அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிட்டனர்.

இதில் ஸ+க்கீம் நீதி அமைச்சராகப் பதவியும் ஏற்றுவிட்டார். தேர்தல் காலத்தில் தான் வெளிவிட்ட அத்தனை வார்த்தைகளையும் இரவோடிரவாக விழுங்கிக்கொண்டு, மறுநாள் பதவியேற்ப்பில் சத்தியபரமாணத்தையும் செய்து கொண்டார்.

இதில் அவருக்கோ அல்லது அவரை போன்றோர்களுக்கோ எந்த வெட்க்கமும் இருப்பதாக படவில்லை. எந்த மனச்சாட்சியும் இருப்பதாக தெரியவில்லை. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - இதுக்கு போய் அலட்டிக்கொள்ளலாமா” என்று பஞக் டயலக் சொல்வதற்கு மக்கள் என்ன நகைச்சுவை விடும் நிலையிலா இருக்கிறார்கள்.

அரசியல் விதியின் படி வாய்ப்பகளை பயன்படுத்துவதற்க்கான உபாயங்களை கையாள்வது என்பது வேறு, வசதிகளை பெறுவதற்க்காக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது வேறு.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள இந்த புதிய விருந்தாளிகள் வசதிகளை நோக்கமாகவே கொண்டிருக்கின்றனர்.

இல்லையெனில், அரசாங்கத்திடம் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றத்தையோ, மறுமலர்சியையோ, கண்டு விட்டா இவ்வாறு தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

அல்லது அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் நினைப்பதெல்லாத்தையும் சாதித்து விடலாம்என்றோ…? தூம் சார்ந்த சமூகங்களின் தேவைகளை எல்லாம் பெற்றுவிடலாம் என்றோ..? கருதியா அளிக்க முன்வந்தார்கள்.

உண்மையில் மகிந்த அரசின் முன்னால் தாம் இப்போதைக்கு எதுவுமே செய்யமுடியாது என்ற கைமாறு நிலைதான்.இந்த நிலைப்பாட்டு மாற்றத்தக்கு க் காரணம். இதைத்தான் “சரணாகதி” என்று சொல்வது.

ஏறக்குறைய கூட்டமைப்பும் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் ஒரு அணக்கப்பாட்டுக்க செல்வதைத்தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற நிலையை இந்தியாவும் இலங்கையும் உருவாக்கிக்கொள்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவார அமைச்சர் சொன்ன கூற்று இதையே மெய்மறந்துள்ளது. நடைபெற்ற போரானது நல்லினக்கத்துக்கானதே என்று . ஆனால் இதன் பின்னரான நிலைகள் குறித்து இந்தியா விளக்கமளிக்கவில்லை..

புதன், 24 நவம்பர், 2010

உழைப்பே உயர்வு

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும். முன்னேற வேண்டும். வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நீங்கள் முன்னேற. உயர வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும்.

மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும் கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.

உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.

முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ திகைப்போ தோன்றாது.

உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள். உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள்.

குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்? உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான்.

பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன. 3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா? ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகம் பார்த்து வியக்கும் தாஜ்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள்இ பல மாதங்கள் பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!

பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது. ஆகவே ங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும் விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?

உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர் ஒருவகையினர் வறுமையிலும் பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.

முதல்வகையினர் சோம்பேறிகள் இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.

சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு குதிரைப் பந்தயம் சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.

குறுக்குவழியினர் திருட்டு ஏமாற்றுவாட்டி வதைத்து வட்டி வாங்குதல் கலப்படம் கள்ளச்சந்தை கொள்ளை கொலை கொள்கையில்லா அரசியல் இலஞ்சம் ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள். இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம். அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.

இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது. இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள்.

நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான். ஆனால் இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால் தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும்.

சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

இயற்கை ஒழுங்கின்மையையோ ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில் சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.

நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.

இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும் நேர்மையும் ஒளிரும். அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.

இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோஇ தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.

வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடையை எடுத்து வையுங்கள்.

உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும உயர வேண்டும் வளர வேண்டும் விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது.

ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.

தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும் குழந்தை அழுது அலறி பசியாறி உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.

மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும். தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும் விழும் அழும் ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.

அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும்.

குழந்தையால் எப்படி முடிகிறது. இயற்கை தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.

ஆகவே நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும் முன்னேற வேண்டும் என்பதும் வளர வேண்டும் என்பதும் விரும்புவதை
( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா? எப்படி?

உங்கள் குறிக்கோள் என்ன? அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது? அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில் வணிகம் அல்லது விற்பனை எது?

அந்தத் தொழில் வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே இப்பொழுதே தொடங்குங்கள். ஒத்தி வைக்காதீர்கள். தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.

ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள் முன்னேற்றத்தை நோக்கி மாதத்தில் முப்பது செயல்கள ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள் ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக வணிகமாக விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.

இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.

முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.

அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும்இ விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது விட்டு விட்டு முயல்வதுஇ ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.

வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும் நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது.

இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.

ஆகவே… அறிந்து கொள்ளுங்கள்.

வெற்றியின் ஒன்பதாவது இரகசியம்…

உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு*

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும்இ முன்னேற வேண்டும்இ வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நீங்கள் முன்னேறஇ உயரஇ வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டுஇ உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால்இ குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும்.

மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும்இ கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.

உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.

முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளைஇ பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போஇ திகைப்போ தோன்றாது.

உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள். உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள்.

குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்? உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான்.

பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன. 3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா? ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லைஇ என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகம் பார்த்து வியக்கும் தாஜ்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள்இ பல மாதங்கள்இ பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!

பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது. ஆகவேஇ நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும்இ விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?

உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர்இ ஒருவகையினர் வறுமையிலும்இ பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.

முதல்வகையினர் சோம்பேறிகள்இ இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.

சோம்பேறிகள் தங்கள் ஆசைகளைஇ கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டுஇ குதிரைப் பந்தயம்இ சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டுஇ மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.

குறுக்குவழியினர் திருட்டுஇ ஏமாற்றுஇ வாட்டி வதைத்து வட்டி வாங்குதல்இ கலப்படம்இ கள்ளச்சந்தைஇ கொள்ளைஇ கொலைஇ கொள்கையில்லா அரசியல்இ இலஞ்சம்இ ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள். இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம். அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.

இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது. இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள்.

நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான். ஆனால்இ இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால்இ தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும்.

சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

இயற்கை ஒழுங்கின்மையையோஇ ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில்இ சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.

நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.

இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும்இ நேர்மையும் ஒளிரும். அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.

இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோஇ தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.

வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடையை எடுத்து வையுங்கள்.

உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்தஇ அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும்இ உயர வேண்டும்இ வளர வேண்டும்இ விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது.

ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.

தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும்இ குழந்தை அழுதுஇ அலறிஇ பசியாறிஇ உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.

மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும். தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும்இ விழும்இ அழும்இ ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.

அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும்.

குழந்தையால் எப்படி முடிகிறது. இயற்கைஇ தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.

ஆகவேஇ நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும்இ முன்னேற வேண்டும் என்பதும்இ வளர வேண்டும் என்பதும்இ விரும்புவதை
( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா? எப்படி?

உங்கள் குறிக்கோள் என்ன? அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது? அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில்இ வணிகம் அல்லது விற்பனை எது?

அந்தத் தொழில்இ வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றேஇ இப்பொழுதே தொடங்குங்கள். ஒத்தி வைக்காதீர்கள். தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கைஇ மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.

ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள்இ முன்னேற்றத்தை நோக்கிஇ மாதத்தில் முப்பது செயல்கள்இ ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள்இ ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாகஇ வணிகமாகஇ விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.

இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும்இ பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.

முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.

அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும்இ விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பதுஇ விட்டு விட்டு முயல்வதுஇ ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.

வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும்இ நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது.

இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.

ஆகவே… அறிந்து கொள்ளுங்கள்.

வெற்றியின் ஒன்பதாவது இரகசியம்…

உழைப்பே உயர்வு

மிஸெல் ஓபாமாவின் வியப்பூட்டும் ஆடையணிகள்.....

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஸெல் ஒபாமா தனது அசத்தும்
***************************************************************************
ஆடையணிகள் மூலம் உலகின் கவனத்தை பெரிதும் கவர்ந்து வருகிறார். கடந்த
************************************************************************
கோடைகாலத்தின் போது அவர் விடுமுறை விடுதிக்கு சென்ற போது அணிந்திருந்த கட்டை
**********************************************************************************
காற்சட்டையும் புயங்களை வெளிகாட்டும் மேற்சட்டையும் சர்ச்சையை தோற்றவித்தன.
****************************************************************************
எனினும் அன்மையில் இந்தோனேசியாவுக்கு பராக் ஒபாமாவுடன் வந்திருந்த மிஸெல்
**************************************************************************
அணிந்திருந்த ஆடைகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
*******************************************************
இந்த விஐயத்தின் போது இருவரும் பிரசித்தி பெற்ற ஐகார்த்தா நகரில் இஸ்டிக் லால் பள்ளி
*************************************************************************************
வாசலுக்கு விஐயம் செய்தனர். அச்சமயம் மஞ்சள் நிற முழுக்காற்சட்டையும் கை நீண்ட
*********************************************************************************
மேற்சட்டையும் அணிந்து தலையை மூடி, பாதங்களுக்கும் காலுறை அணிந்தே மிஸெல்
*********************************************************************************
சென்றார். இஸ்லாமிய சட்டங்களின் படி பெண்ணொருவர் தனது முழு அங்கத்தையும்
*******************************************************************************
மறைத்தவாறே உட்ப்புக வேண்டும் என்ற சம்பிரதாயத்தை மிஸெல் இம்மியளவும் பிசகாது
*********************************************************************************
நிறைவேற்றினார்.
******************
இந்தோனேஸிய ஐனாதிபதின் மாளிகையில் அவர்கள் இருவரும் இராப்போசன விருந்துபசாரம்
***********************************************************************************
நடைபெற்றபோது மிஸெல் இந்தோனேஸியாவில் வாங்கிய ஆடையையும் அலங்கார மாலை
************************************************************************************
ஒன்றையும் அணிந்து அசல் இந்தோனேசியப் பெண் போல விருந்தினர்களை அசத்தினார்.
**********************************************************************************
வேறொரு நாட்டிலிருக்கம் போது அந்த நாட்டின் கலாசாரத்துக்கு ஏற்ப உடையணிவதில்
***********************************************************************************
மிஸெல் கை தேர்ந்தவர். அக்கறை காட்டுபவர். இந்தோனேசிய ஐனாதிபதியையும் அவரது
************************************************************************************
பாரியாரையும் சந்தித்த போது அணிந்திருந்தது. நீண்ட காற்சட்டையும் சிவப்பு கறுப்பு கலந்த
*************************************************************************************
கை நீண்ட குர்தாவுமே.... இந்தோனேசியாவை விட்டு வெளியேறும் போது மிஸெல்
***************************************************************************
வெள்ளை நிற நீண்ட கவுன் அணிந்து அனைவரையம் கவர்ந்தார்.
***********************************************************
அண்மையில் இந்திய ஐனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல் அவரது கணவர் தேவசிவ்
*****************************************************************************
பட்டேல் ஆகியோரின் அழைப்பை ஏற்று ஓபாமா தம்பதியினர் இந்திய விஐயத்தை
**************************************************************************
மேற்கொண்டனர். இரவு போசனத்திற்கு இந்திய ஐனாதிபதி மாளிகைக்கு சென்ற போது
******************************************************************************
மிஸெல் பாதங்கள் வரை நீண்டிருந்த சாயாவும் கை நீண்ட பிளவுசும் அணிந்திருந்தார்.
********************************************************************************
அவ்வாறே புது டெல்லியின் மகாத்மா காந்தியின் நினைவுத்தூபியைத் தரிசிக்க சென்ற
******************************************************************************
போதும் இந்திய பெண்ணாகவே மிஸெல் தோற்றமளித்தார்.
******************************************************
ஓவ்வொரு நாட்டுக்கும் விஐயம் செய்யும் போது அந்த நாட்டின் கலாசாரத்துப்கேற்ப
******************************************************************************
உடையணிவதுடன் இயன்றவரை நகைகளை குறைத்து எளிமையாகவே மிஸெல்
****************************************************************************
காட்சியளிப்பார். கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது ஓபாமா தம்பதியினர் இந்திய
**********************************************************************************
விஐயத்தை மேற்கொண்டனர். தீபாவளியன்று மும்பாய்க்கு விஐயம் செய்த போது அசல்
************************************************************************************
இந்திய பெண்ணைப்போல உடையணிந்து மும்பை மாணவமாணவிகளுடன் சரிசமமாக
********************************************************************************
நடனமாடி மகிழ்ந்தார் மிஸெல். அவரது நடனம் அணைவரையம் கவர்ந்திழுத்தது. சற்று
********************************************************************************
நேரம் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த பராக் ஓபாமாவும் நடனத்தில் கலந்து கொண்டதே
********************************************************************************
அவ் விழாவின் உச்சக்கட்டமெனக் கருதப்பட்டது.
********************************************

"அமெரிக்காவின் முதற்; பெண்மணி எங்களுடன் சரிக்கு சரி நடனமாடினார் என்பதை
***********************************************************************************
எங்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அது கனவா என இன்றும் சந்தேகம் எங்களுக்கு
***********************************************************************************
உண்டு" என்கின்றனர் பிரமித்துப் போன மும்பை மாணவிகள். பாடசாலையை விட்டு
*****************************************************************************
செல்வதற்கு முன்பு சகல மாணவர்களுக்கும் குறிப்பு புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள்,
*************************************************************************************
அடங்கிய வெள்ளை மாளிகையின் படம் பதித்த பைகளை விநியோகித்தார் மிஸெல்.
****************************************************************************
உலகின் முதற் பெண்மணி என்ற பந்தா துளியும் இல்லாமல் மக்களோடு மக்களாக
*************************************************************************
நெருங்கிப்பழகும் மிஸெல் தனது கணவனின் வெற்றியில் அசைக்க முடியாத பங்கை
****************************************************************************
வகிக்கிறார். என்பது பொரும்பாலானோரின் கருத்து.
*********************************************** நெடுந்தீவு - முகிலன்
*********************

செவ்வாய், 23 நவம்பர், 2010

நீ விழிகளால் ...........

நீ விழிகளால் - என்னை
-----------------------
சாப்பிட்டாய்
-------------
உதடுகளை உம்முண்ணு
-----------------------
வைத்துக்கொண்டு
-------------------

நீ திரும்பப்பார்
*******************
உனக்கு பின்னால்
*********************
ஊர்வலமே வருகிறது
****************************
அது நான் மட்டுமே
*************************


நீ பூக்கடைக்கு போகாதே
//////////////////////////////////////////////////////
உன்னை வாங்குவதற்கு
///////////////////////////////////////////////
வரிசையில் வந்துவிடுவார்கள்
/////////////////////////////////////////////////////////


நீ தாலாட்டி
........................
உறங்கவைப்பாய் தானே என
.........................................................
அழுது கொண்டிருக்கின்றன
......................................................
என் நினைவுகளும்
...................................


குயிலுக்கு பாடத்தான் தெரியும்
0000000000000000000000000000000000
மயிலுக்கு ஆடத்தான் தெரியம்
000000000000000000000000000000000000
உனக்கு ஆடவும் தெரியும்
0000000000000000000000000000
பாடவும் தெரியுமே…
00000000000000000000

ரத்தினபுரி மாவட்ட தமிழ்க்கொலை

“ இலக்கணமும் இலக்க்pயமும் தெரியாதவன்

ஏடெழுதல் கேடு நல்கும் “ (பாரதிதாசன் )

தமிழ் மொழிக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் பாரதி என்கிறார் டாக்டர் லீலாவதி அவர்கள் ஆனால் இந்த இலங்கைத்தீவில் தழிழர்களைப் போலவே தழிழுக்கும் ஆங்காங்கே தலை வெட்டப்படுவது வேதனைக்குரியது.

இலங்கையின் சப்ரமுவா மாகாண இரத்தினபுரி பகுதியில் பாரபட்சம் இன்றி அரச அரசசார்பற்ற சமூக அமைப்புக்களினதும் பொது நிறுவனங்களினதும் கண்மூடித்தனமான செயற்பாடுகளால் எழுத்துக்களும் வாக்கியங்களும் சரிவர எழதப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பெயர் பலகைகளை அவதானிக்கையில் தழிழர்களுக்கான அங்கிகாரமும் கருத்துக்களுக்கான சுகந்திரமும் வெளியே தெரிய வருகின்றது

உடம்பில் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலே உடனே ஊனம் என்று முத்திரை குத்தப்படுகின்றது அது போலவேதான் ஒரு மொழியின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டதும் ஊனம் என்று அழைத்துக்கொள்ளலாம் இரத்தினபுரி மாவட்ட பெயர் பலகைகளில் ஊனமாக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை ஏன் தானோ இதுவரை யாரும் மாற்றுச்சிகிச்சை செய்துகொள்ளவில்லை அதற்கான காரணத்தை ஆராய முற்படுகையில் முறைமாறான தகவல்கள் அலைகளாக திரண்டெழுகின்றன

இலக்கணச்செம்மையை சரிவரக்கற்றவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லையா…?.அல்லது இரத்தினபுரி மாவட்ட அரச அரசசார்பற்ற அமைப்புகளில் தமிழர்களை இனைத்துக் கொள்வதில்லையா…?..

ஓத்த வடிவமுள்ள சொற்கள். ஒரு பொருள் தரும் பல சொற்கள். சொல்லின் தொனிப்பொருள். பலமான வினைச்செற்கள். பயனற்ற சொற்கள். சொற்த்;தொடர். சொற்தொடரின் தொனிப்பொருள்.

சொற்சேர்க்கை. சொற்களும் சொற்தொடர்களும் உரிய இடத்தில் இல்லாமை. வாக்கியப் பிழைகள். எழுவாய் பயனிலை பொருத்தமின்மை. பால் வழுக்கள். ஒருமை பன்மை தவறுகள். கால வழு. செய்வினை செயற்பாட்டுவினை பிரச்சனைகள். வேற்றுமை உருபு இடைச்சொல் குளறுபடிகள். இப்படி எண்ணில் அடங்காத எழுத்துப்பிழைகளோடும் கருத்துப்பிழைகளோடம் இரத்தினபுரி பிரதேசத்தின் அரச அரச சாற்பற்ற பொது நிறுவனங்களினதும் சமூக அமைப்புக்களினதும் பெயர் பலகைகள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன

இதை சீர்செய்து மாற்றி அமைப்பதற்கு இலங்கை அரசியல் யாப்பிலா…?.மாற்றம் கொண்டு வரவேண்டும் வீணாய் எதற்காக காலதாமதமாக்கப்படுகிறதோ

“எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” எனப்படுகிறது திருக்குறளில்….

இறாலின் கொழுப்பு முழுவதும் அதன் தலையில் இருப்பதாக உயிரியல் நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் அந்த இறாலை மனிதர்கள் வறுத்தும் பொரித்தும் உண்கிறார்கள் இதே மண்டக்கொழுப்பு மனிதர்களுக்கு இருக்குமாயின் அதை இன்னொரு மனிதன் விமர்சித்து விடுகிறான் இங்கே ஒரு சம்பவம் செய்தியாகின்றது இதே போலவேதான் இலங்கையும் - இரத்தின புரியும் - தமிழ் மொழியும் உதாரணம் (கொழும்பில் புதிதாக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் பெயர் பலகையில் கொழும்பு என்பது தவறாக கொழுப்பு என பொறிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது)

“ஆரம்பமே அமர்களமாகி விட்டது” அதாவது இரத்தினபுரி வரவேற்கிறது என்பது சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளினாலும் அழகாக வர்ணம் தீட்டப்பட்டு இரத்தினபுரி நுழைவாயிலில் நாட்டப்பட்டிருக்கிறது ஆனால் தமிழ் எழுத்தில் மட்டுமே மிகப்பெரிய தவறு விடப்பட்டிருக்கிறது அதாவது இரத்தினபுரி வரவேற்கிறது என்பது இங்கே இரத்தினபுரி வரவேற்கிறதா என்று ஒரு கேள்விக்குறியோடு காட்சி தருகின்றது இது இரத்தினபுரியின் வரவேறப்;பிலே தமிழுக்கான முதற்கொலை

குறிப்பாக ஒரு நபரிடம் உங்களை வருக வருக என வரவேற்கிறோம் என்பதிலும் உங்களை வருக வருக என வரவேறப்;பதா..?.. என்பதிலும் ஒரு எழுத்து மாறுபடும் போது எவ்வாறான பதம். பொருள் மாறுபடுகிறது என்பது தெரியவருகின்றது

இருந்தாலும் நாம் ஒரு இடத்திற்கு பயணம் போகும் போது இடைய+கள் ஏற்ப்படும் பட்சத்தில் அவசகுணமென்று அந்தப் பயணத்தை நிறுத்திவிடுகின்றோம் சிpலவேளை இடையூறுகள் வரும் என்று தெரிந்தும் தேவைக்காக பயணத்தை மேற்க்கொள்கிறோம் ஆனால் இது உண்மையாகவே எனது இரத்தினபுரி பயணத்தில் நான் அனுபவித்த ஒன்று…. உள்ளே முக்கிய அடுத்த இடமாக சப்ரகமுவ மாகாண சபைக்கு சென்றிருந்தோம் ஆச்சரியமான ஒன்று நுழைவாயிலே தூக்கி வாரிப்போட்டது

சப்ரகமுவ மாகாண கட்டிடத் தொகுதி என்பது சபரமுவா மாகாண கட்டிடந் தொகுதி என்று காட்சி தந்தது இங்கே ஊரின் பெயரும் தவறாகவம் அதன் பகுதிப் பெயரும் தவறாகவும் காணப்பட்டதோடு சிங்கள எமுத்துக்களிலோ அல்லது ஆங்கில எமுத்துகளிலோ எந்தத் தவறுகளும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இரத்தினபுரி மாகாண பதில் செயலாளர் சுயித்திரா குணவர்தனவுடன் கேட்டபோது இந்த பெயர்ப்பலகை பாவனைக்கு உடப்;படுத்தப்பட்டு இதுவரை நான்கு வருடங்கள் கடந்து விட்டன ஆனால் இதில் தமிழ் எழுத்துப்பிழைகள் இருப்பதாக இப்போதுதான் தெரியவருகிறது இருந்தாலும் இந்த எழுத்து பிழைகள் விடுபட்டமைக்கான காரணம் என்னவெனில் இங்கே வாழும் தமிழ் மக்கள் கூட சிங்களமொழிக்கு பழக்கப்பட்டு விட்டார்கள் அத்தோடு தமிழ் மொழியினை இங்கே வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் மொழியாகவே

கருதுகிறார்கள்

காலமும் சூழலும் ஒரு மனிதனை எவ்வாறு மாற்றிவிடுகிறது தெரிகிறதா…?.. அங்கே தமிழ் எழுத்துக்களில் விடுபட்ட தவறுகளுக்கான காரணத்தை அவதானிக்கையில் அந்த தவறுகளை தமிழர்கள்தான் விட்டார்கள் என்று கதை சொல்லப்படுகின்றது ஒரு வகையில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியாதாகவும் உள்ளது ஏனெனில் இந்த தவறு விடப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன ஆனால் அந்த தவறுபற்றிய விமர்சனமோ அல்லது திருத்தப்படவேண்டும் என்ற கருத்துக்களையோ யாரும் இதுவரை முன்வைக்கப்படவில்லை இந்தப்பிழைகள் தொடர்ந்து நிலைத்து வாழ்வதற்கு நாமும் சில இடங்களில் துணைபோயிருக்கிறோம் என்பதை காலத்தின் தேவை கருதி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இரத்திபுரி வரவேற்கிறது என்பதிலே ஆரம்பித்த எழுத்துப்பிழைக் குளறுபடிகள் உள்ளே செல்லச்செல்ல இன்னும் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும்; அவசரநடவடிக்கைகளகள் பிரிவும் ஒரே இடத்தில் இரத்தினபுரியில் இயங்கிவருகிறது என்றாலும் இந்த இரண்டின் பெயர் பலகைகளிலும் படு மோசமான எழுத்துப்பிழைகள் விடப்பட்டிருக்கின்றன மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திலையம எனவும் அவசர நடவடிக்கைகள் பிரிவு என்பது அவசர நடவடிககைக்ள பிரிவு எனவும் காட்சிப்படுத்தபட்டுள்ளது இங்கு விடப்பட்;ட தவறுகளுக்கான காரணம் எதுவாக இருப்பினும்….

இது பற்றி அனர்த்த முகாமைத்துவ இரத்தினபுரி மாவட்ட அதிகாரி கேணல் அபேயவர்த்தனவிடம் கேட்டபோது சரியாக தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் இரத்தினபுரியில் இல்லை என்றும் இருக்கும் ஒருசிலரும் இது பற்றி சிந்திப்பதி;ல்லை என்றும் இப்போதுதான் தங்கள் ஊழியர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்ததோடு பெயர்ப்பலகையில் விடப்பட்டிருக்கும் எழுத்து தவறு இப்போதுதான் தங்களுக்கு தெரியவந்திருக்கிறது என்றும் தெரிவித்தார் இருந்தாலும் இந்த தவறினை வெகுவிரைவில் சீர் செய்வதாகவும் கருத்து வெளியிட்டார்

தவறுகளை இனங்கண்டு ஆராய்ந்து பார்க்கிற போதுதான் தெரியவருகிறது தவறுகள் அதிகம் தவறுகள் என்று தெரியாமலே +தலைதூக்கி நின்றிருக்கின்றன ஆனால் இங்கே எழுத்துக்கள்தான் இதுவரை தவறுகளாய் விடப்பட்டிருந்தாலும் மிக முக்கியமான அரச நிறுவனத்தில் ஒரு வாக்கியமே பிழையாக்கப்பட்டிருக்கிறது

இரத்தினபுரி மாவட்ட பிரதேசசெயலகத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையில் சிங்கள மொழியினை அப்படியே மொழிபெயர்த்து தமிழுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது அதிலும் தவறு விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக இரத்தினபுரி உதவி மாவட்ட அரசாங்க அதிபர்…ஏ..எச் எஸ் திசாநாயக்க அவர்களிடம் கேட்ட போது இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிகாரிகள் தெரிவித்ததை விட இவர் வித்தியாசமான கருத்தொண்றை தெரிவித்தார்

அதாவது இது தவறு என்று தங்களுக்கு தெரிந்த போதும் இதை மாற்றி அமைப்பதற்க்கு அதற்க்கான நிதி பிரச்சனையினை காரனம் காட்டி பேசினார்

இதல் இருந்து நாம் எதனை விளங்கிக்கொள்கின்றோம் இந்த பதிலினை அவதானிக்கையில் சிங்கள ஆங்கில மொழியில் ஒரு தவறு விடப்பட்டிருக்கும் ஆயின் நிதிப்பிரச்சனைகளை காரணம் காட்டி கதைத்துக்கொண்டிருப்பார்களா…?..

இப்படி இரத்தினபுரி மாவட்டத்தில் அரசாங்க அரசசார்பற்ற சமூக நிறுவனங்கள் என்று ஒன்றும் விடாமல் எல்லாவற்றிலுமே தவறுகள் தமிழ் எழுத்துக்களில் மட்டும் விடப்பட்டிருப்பது கேலிக்குரியதாகவே காணப்படுகின்றது

முக்கியமாக இரத்தினபுரி சென் யோக்கிங் தமிழ் வித்தியாலய பெயர் பலகை சிங்கள மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அங்கே தமிழ் எழுத்துக்களாகக் காணப்படுவது சிங்கள மொழியினை அப்படியே தமிழுக்கு மாற்றப்பட்டிருக்கிறது

சமுர்த்தி சங்கங்கள் தங்குமிடவிடுதிகள் ஆலயங்கள் பாடசாலைகள் என்று எந்த பாகுபாடுகளுமின்றி எல்லா இடங்களிலுமே தமி;ழ் மொழி கொலைசெய்யப்பட்டிருக்கிறது

பொதுவாக இது தொடர்பாக இரத்தினபுரி மாவட்டத்து அரசாங்க அதிபர் எச்.டபிள்யு.குணதாசிடம் கேட்ட போது ஆரம்பகாலம் தொட்டு இரத்தினபுரியில் தமிழுக்கு இந்த பிழை இருந்து வருவதாகவும் இதுவரை இதற்கான எந்த அறித்தல்களோ தகவல்களோ தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் இன்றில் இருந்து இவற்ரை சீர் செய்வதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்

இருந்தாலும் தமிழர்கள் பல வருடக்கணக்காக சிறுபாண்மை இனமாக புறந்தள்ளப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை அது போல் இல்லாமல் வெகுவிரைவில் சீர் செய்யப்பட்டால் அது தமிழர்களுக்கும் இலங்கை ஐனநாயக சோசலிச குடியரசு என்ற பெயருக்கும் பெருமை சேர்த்து நிற்க்கும்.

வி.முகிலன்
இலங்கை ஊடகவியலாளர் கல்லூரி
`

திங்கள், 22 நவம்பர், 2010

வயிற்றுக்கு சோறு போட்டு வளர்த்து விட்ட

அம்மாவுக்கு வாய்க்கரிசி போடவும்

வரவில்லை.....அந்நிய நாட்டில்
...
வசிக்கும் மகன்மார்கள் - ஆனால்

அனுதாபம் மட்டும் வருகிறது

"பேஸ்புக்கில்" - நெடுந்தீவு - முகிலன்

‎"இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம்" Srilanka Young Writer's Association

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் உருவம் கொடுத்து அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளைதற்போது வெளியிட முடியாத
சூழல் காணப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் மு...கமாக
இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்படுகிறது.
நாட்டில் பல பாகங்களில் உள்ள 30 வயதுக்கட்ப்பட்ட தமிழ்,முஸ்லீம் இளம்
எமுத்தாளர்கள், கவிஞர்களை ஒன்றினைத்து அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு
படைப்பாளியின் தரமான ஆக்கங்களை வெளியீடு செய்து பல இலக்கியவாதிகளை
இலக்கிய உலகினுள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலக்கியத்துறையில் ஆர்வமுள்ளவர்களும், சிந்தனையாளர்களும்,சமூத்திற்காய்
குரல் கொடுக்கும் எழுத்தாற்றல் மிக்கவர்களும,; எம்மோடு இணைந்து கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு - நெடுந்தீவு – முகிலன்
+94778039430
mukilanvsw@gmail.com
நட்சத்திரங்கள் நடுவே உனக்கொரு வீடு

ஒரு
----
ரோஐh செடி வழர்த்து வருகிறேன்
...-----------------------------------
ஓவ்வொரு நாளும் தண்ணீரும் ஊற்றிவருகிறேன்
------------------------------------------------
இதுவரை ஒரு பூ தந்ததில்லை… ஆனால்
--------------------------------------- --
நீ எப்படி
------------
பார்க்கும் போதெல்லாம்
-------------------------
ரோஐவாகவே இருக்கிறாய்…..
----------------------------------


வளையல் கடைக்காரனை திட்டினேன்.
------------------------------------
அழகான உன் கைகளுக்கு
--------------------------
பொருத்தமான வளையல்களை
---------------------------------
வீதியில் வெய்யிலில்
---------------------
போட்டு விற்க்கிறான்.
------------------------


கனவில் நீ
-------------
வந்து போனால் - நான்
------------------------
காலையில் தலையனை
------------------------
அருகில் தேடுகிறேன.;
----------------------
தவறிவிழுந்திருக்குமென
-----------------------
உன் கொலுசுகளை….
--------------------


நீ
---
எனக்காக
-----------
ஓரு பொய் சொல்லு….
--------------------
என்னைக் காதலிக்கவில்லை என்று….
-----------------------------------------


நெடுந்தீவு – முகிலன்.

பேஸ்புக் இணையத்தில் ஏலிஸபெத் மகாராணி

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உலகபிரசித்தி பெற்ற பாடகி லேடி காசா, திபேத்தின் ஆன்மீகத் தலைவர் லாமா போன்ற பிரபலங்களைத் தொடர்ந்து பேஸ்புக் இணையதளத்தில் பிரவேசித்துள்ளார். பிரிட்டிஸ் மகா ராணி இரண்டாம் எலிஸபெத்.

இதுவரை அரச குடும்பம் என்ற ரீதியில் சாதாரண பிரiஐகளிடம் இருந்து ஒரளவு ஒதுங்கியே வாழ்ந்து வந்த மகா ராணியின் பேஸ்புக் பிரவேசம் பிரமாண்டமான வரவேற்பை பெற்றதுடன் இரண்டே நாட்க்களில் இரண்டு இலட்சத்திற்கம் அதிகமான உற்சாக வரவேற்பு அவருக்கு கிடைத்துள்ளது.

எனினும் மகாராணியின் இந்த பிரவேசம் ஒரு சாரார் மத்தியில் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. பரம்பரை பமை;பரையாக பிரித்தாணிய அரச குடும்பம் கட்டிக்காத்துவந்த கௌரவத்தை மகாராணி நடு வீதிக்குக் கொண்டு வந்துள்ளார் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அரச குடும்பம் என்ற கோதாவில் சாதாரண பிரiஐகளிடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்து வந்த நிலையை மாற்றி மகாராணி மக்களுக்கு மிகச் சமிபமாக வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கும் குறைவில்லை..

பிரிட்டிஸ் மகாராணியின் பேஸ்புக் பக்கத்தில் அரச குடும்பத்தினரின் பிரபல புகைப்பங்கள். நிகழ்வுகள், புத்தம் புதிய செய்திகள்,போன்றவை வெளியாகின்றன. அவ்வாறு வெளிவரும் தகவல்கள் பற்றிய மக்களின் அபிப்பிராயங்கள், கருத்துக்கணிப்புகள் போன்றவற்றை வாசகர்கள் தெரிவிக்கவும் அவரது பேஸ்புக்கில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் மகாராணியின் பேஸ்புக் பக்கம் சாதாரணமான பக்கத்தை விட வித்தியாசமானது. சாதாரண பேஸ்புக் கணக்கில் நண்பர்களின் வேண்டுகோள்கள் (கசநைனௌ சநஙரநளவ) சேர்க்கப்படமாட்டாது எனினும் மகாராணியின் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் படங்கள்,செய்திகள்,பற்றிய விமர்சனங்களைப் பதிவதற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கும், வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பேஸ்புக் மூலம் அரச குடும்பம் இதுவரை கட்டிக்காத்து வந்த கௌரவம் ஊசாதீனப்படுத்தப்பட்டதாகவும் இப் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அரச குடும்பத்தின் இரகசியங்களை அம்பலமாக்குகின்றன என்றும் கண்டனங்களும் எதிர்ப்புக்களும் நிறையவவே எழுந்துள்ளன.
அதே சமயம் மகாராணியும் மக்களில் ஒருவரே என்ற ரீதியில் அரச குடும்பத்தின் விவகாரங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது அவரது பெருந்தக்மையை காட்டுகிறது என ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அதே சமயம் இளவரசர் சார்ல்ஸ் அவரது காதலி கெமிலா பற்றி எழுதப்பட்ட மோசமான விமர்சனங்களும் மகாராணியின் பேஸ்புக் பக்கத்தில் நிரம்பிவழிகின்றன. அதனைத்தொடர்ந்து பேஸ்புக் பக்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கவென அரச மாளிகையில் நியமிக்கப்பட்டிருந்த பணியாளர்கள் அத்தகைய தப்பவிப்பிராயங்களைக் களைவதற்காக விளக்கங்களை அளிப்பதற்கு முழு மூச்சில் செயற்பட வேண்டி வந்தது. எனினும் மகாராணி உட்ப்பட அரச குடும்பத்தினருக்கு ஏற்ப்பட்ட களங்கம் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாத அளவுக்கு விஸ்வ ரூபம் எடுத்தள்ளது. அரச மாளிகைப் பணியாளர்கள் மகாராணியின் பேஸ்புக் பிரவேசம் விளைவித்துள்ள எதிரொலிகளால் கதிகலங்கிப்போயுள்ளனர்.


“பிரிட்டிஸ் மகாராணி இரண்டாம் எலிஸபெத் “பேஸ்புக்கில”; பிரவேசிவித்தது எங்களை பெருமையடையச் செய்கிறது. அவர் 16 நாடுகளுக்கு அரசி. அவ்வாறே பொதுநலவாய நாடுகளின் தலைவி. அவை எல்லாவற்றுக்கும் மேலாக இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்கு பாத்திரமானவர். அத்தகைய ஒருவர் அம் மக்களுக்கு சமிபமாக வர எத்தனிப்பதில் தவறில்லை. அதற்கு உதவுவதே அவரது “பேஸ்புக்” பிரவேசத்தின் நோக்கம் அரச குடும்பத்தைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசி நினைப்பதில் தப்பில்லை. அவ்வாறே அவரது அரச பணிகளுக்கும் இந்த பக்கம் உதவியாக இருக்கம் என அரச மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1926 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி பிறந்த அரசி எலிஸபெத்துக்கு தற்போது வயது 84. அரச குடும்ப பெண் என்பதால் மட்டும் அவர் சாதாரண பெண்களை விட வேறுபடவில்லை. தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அவர் மகாராணி எலிஸபெத் எனும் மேற்ப்படியில் இருந்து இறங்கி சாதாரண எலிஸபெத்தாக மக்களோடு மக்களாக இணைவதற்கு விரும்புகிறார். உலகில் நாள்தோறும் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ள மகாராணி எப்போதும் முனைப்புடன் இருப்பார். அதற்கென வீடியோ படக்காட்சிகளை அடிக்கடி பர்ப்பது அவரது வழக்கம். அவரது “பேஸ்புக்” பிரவேசம் அத்தகைய ஒன்றே என வாதிடுபவர்களும் உள்ளனர்.

மகாராணியின் நவீன “எப்பள் ஐபொட்டில்” மேலத்தேயத்தின் ஏராளமான அதிவேகத்துள்ளாட்ட இசைகள் பதிவாகியுள்ளன. அவற்றை அடிக்கடி கேட்டு ரசிப்பது அவரது வழக்கமான பொழுதுபோக்கு. தற்போதய “பேஸ்புக்” பிரவேசத்தின் மூலம் அவர் தனது உண்மையான வயதை விட இளமையாக இருக்க விரும்புவதுடன் அரச பரம்பரை என்ற கோதாவை விடுத்து சாதாரண ஒரு பிரஐயாக மக்களுக்கு மிக சமீபமாக இருக்க விரும்புகிறார். எவ்வாறாயினும் பிரிட்டிஸ் அரச பரம்பரையின் தனிப்பட்ட விபரங்களை “பேஸ்புக்” மூலம் பகிர்ந்துகொள்ளும் எண்ணம் மகாராணிக்கு ஒரு போதும் கிடையாது. அரச குடும்பத்தின் அந்தரங்க்ளை பாதுகாத்துக்கொள்வதில் அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார். எனினும் நாளடைவில் இது சாத்தியப்படுமா…? என கேள்வி எழுப்புபவர்களும் உலகெங்கும் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் இளவரசி டயானா அரச குடும்பம் என்ற கோதாவை விடுத்து பொதுமக்களிடம் மிகவும் நெருங்கிப் பழகிய போது எலிஸபெத் மகாராணி தனது கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார். அரச குடும்பத்தில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கண்டனங்களை இளவரசி டயானா பகீரங்கமாக தெரிவித்தார். “பேஸ்புக்” போன்ற இணையத்தளங்கள் இல்லாத காலத்திலேயே டயானா “பொதுமக்களின் இளவரசி” என பிரசித்தம் பெற்றிருந்தார். டயானாவுக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவு அரச பரம்பரையில் இது வரை எவருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கபோவதும் இல்லை. என்பது உலகறிந்த விடையம்.

இப்போது “பேஸ்புக்” மூலம் இரண்டாவது எலிஸபெத் மக்களுக்கு மிக சமீபமாக வந்துள்ளார். அரச பரம்பரையினர் பொது மக்களை விட உயர்ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்ற கருத்தைக் களைந்து மகாராணியும் ஒரு சாதாரண பெண்னே என்ற உண்மையை உலகுக்கு தெளிவு படுத்தவே மகாராணி முயல்கிறார். என ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

இளவரசி டயானாவின் அகால மரணத்திற்கு பிறகு அரச குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருந்த அபிமானமும் நெருக்கமும் வெகு தூரம் பின்னடைந்து விட்டது. என்பது உண்மை. அதைத்தொடர்ந்து சால்ஸ்,கெமிலா திருமணம் அந்த நிலையை மேலும் பலவீனமாக்கியது. எவ்வாறாயினும் எலிஸபெத் மகாராணியின் “பேஸ்புக்” பக்கத்துக்கு குறுகிய காலத்தில் கிடைத்த மகத்தான வரவேற்பு ஆச்சரியப்படத்தக்கது. எனினும் அத்தகைய உற்சாக வரவேற்புகள் உண்டையில் மக்களின் அடி மனதில் இருந்து வந்தவையா..? அல்லது மகாராணியின் “பேஸ்புக்” வழியாக தங்களை பிரபலமாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சியா.. என்ற கேள்விக் குறியும் எழுந்துள்ளது.

பிரபலங்களின் பெயரில் ஏராளமான போலி பக்கங்கள் வெளிவருவது இன்று சாதாரனமாக நடக்கும் நிகழ்சி. எனினும் மகாராணியின் இந்த பக்கம் அவ்வாறு போலியானது அல்ல என்றும் நிருபணமாகிவிட்டது. அவ்வாறே இந்த பக்கத்துடன் சகலரும் கௌரவமான உறவை வழர்த்துக்கொள்வார்கள் என்ற உத்தரவாதத்தையும் எதிர்பார்க்க முடியாது. தேவையானால் ஒருவர் இந்த பக்கத்தை ஒரு கேலிப்பக்கமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இது வழக்கமான இணையத்தளத்தில் நாள் தோறும் நடக்கும் நிகழ்வு.

“ நான் நினைத்தேன் மகாராணியின் பேஸ்புக் மூலம் அவருடன் உரையாட (உhயவ) முடியுமென்று. ஆனால் அதற்கு அப் பக்கத்தில் இடமளிக்கவில்லை” என்கிறார். ஒரு இளைஞர்.

இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. பிரிட்டிஸ் அரச குடும்பத்தின் ளெகரவமும் மகாராணியின் செல்வாக்குமே என ஒரு சாரார் கருதுகின்றனர். துனி நபரொருபரின் தீர்மானம் அரச குடும்பத்துக்கு சரிப்பட்டுவராது. பல கோணங்களிலும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விடயம். சுhதாரண மக்களுடன் நெருங்கிப் பழகவே நான் “பேஸ்புக்கில்” பிரவேசித்தேன். அரசியாக இருந்தாலும் நானும் ஒரு சாதாரண பெண்னே என எலிஸபெத் மகாராணி கருத்துக் கூறினாலும் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த அரச குடும்பத்தின் கௌரவம் நடு வீதிக்கு வந்துள்ளது என்று கூறுபவர்களின் கருத்திலும் உண்மையுண்டு.

மகாராணியின் “பேஸ்புக்” பிரவேசம் அண்மையில் அவர் மக்களுடன் நெருங்குவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டதா. அல்லது ஏற்கனவே சரிந்து போன அரச குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றவா… என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


எவ்வாறாயினும் இந்த “பேஸ்புக்” பிரவேசத்தின் மூலம் உண்மையில் மக்களை நெருங்க எலிஸபெத் ஆர்வம் காட்டினால் அது வரவேற்க்கத்தக்கது.

“அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.” என்ற பழமொழிக்கேற்ப அரசியலில் ஈடுபட்டு சிறிதொரு பதவி கிடைத்த பின் தன்னை தேர்ந்தெடுத்த மக்களை மறந்து தொலைதூரம் சென்றுவிடும் இன்றைய அரசியல் வாதிகளுக்கு மத்தியில் “அரசியானாலும் நானும் ஒரு சாதனைப்பெண்னே” என தன்னடக்கத்துடன் நினைக்கும் எலிஸபெத் மகாராணியை பார்த்தாவது நம்மவர்கள் சற்றேனும் திருந்தினால் அது அரச குடும்பத்துக்கே அவர்கள் காட்டும் ஒரு கௌரவம் என நினைக்கத் தோன்றுகிறது.

புதன், 3 நவம்பர், 2010

SÖÁh ÙTL· ÚNŸ‹RÖÚX AjÚL ÙYyzÚTorRÖÁ AWjÚL¿•..' GÁTÖŸ L·. B]Ö¥ SÖ• AjÚL SÖ¼T‰ ÙTLÛ[ N‹‡†RÚTÖ‰ AYŸL· «¿«¿TÖL «VÖTÖW• ÚTpeÙLցz£‹RÖŸL·. T›¼p, RVÖ¡“, «¼TÛ], Yjfe LPÁ GÁ¿ YÛLYÛLVÖL ‘¡†‰ r¿r¿TÖL «YÖ‡†‰e ÙLցz£‹RÖŸL·. C[ÛU•, ˜‰ÛU• AjÚL CÛQ‹‰ ÛLÚLÖŸ†‰e ÙLցz£‹R].

WÖ^hUÖ¡eh 56 YV‰, "C‹R YV‡¥ SÖÁ

செவ்வாய், 2 நவம்பர், 2010

அமெரிக்க ராணுவத்தின் அராஜக தர்பாரைத் தொடர்ந்து ஆதாரங்களுடன்

அமெரிக்க ராணுவத்தின் அராஜக தர்பாரைத் தொடர்ந்து ஆதாரங்களுடன்

அம்பலப்படுத்திப் பதறவைக்கிறது, லண்டனின் 'விக்கிலீக்' இணையதளம். லேட்டஸ்ட்டாக, கடந்த அக்டோபர் 22-ம் தேதி, இந்த இணையதளம்... 2004-ம் ஆண்டு முதல் 2009 வரையில், ஈராக் போர் தொடர்பான மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 831 நேரடி ராணுவக் கள அறிக்கைகளை வெளியிட்டது. இது அமெரிக்காவை மட்டுமல்ல, உலகையே அதிரவைத்தது!

ஈராக் போர்க் களத்தில்... தாக்குதல் நடந்த இடம், எந்த வகையான தாக்குதல், யார் நடத்தியது, எத்தனை பேர் உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் எத்தனை, அதில் குழந்தைகள் எத்தனை எனப் பலவற்றையும் பகிரங்கப்படுத்தி இருக்கிறது விக்கிலீக் இணையதளம். கடந்த ஜூலை மாதத்தில் 'ஆப்கானிஸ்தான் வார் டைரி' என்ற பெயரில், ஆப்கான் போர் அறிக்கைகளை இந்தத் தளம் வெளியிட்டு அமெரிக்காவுக்கு முதல் அதிர்ச்சியை அளித்தது. இப்போது... ஈராக் தகவல்கள்! இது மாதிரியான கொடூரங்கள் நடந்தன என்று மனித உரிமையாளர்கள் பொதுவாகச் சொல்லிப் பதறுவார்களே தவிர, அதற்கான ஆதாரங்களை வெளியே கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல!

அப்படியிருக்க, ''உலக ராணுவ வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக இப்படி பெரும் ரகசியம் வெளியாகி இருக்கிறது...'' என்று இதைச் சொல் கிறார்கள்.

விக்கிலீக் வெளிப்படுத்தி வரும் முக்கியத் தகவல்கள் இவைதான்...

ஈராக் போரின்போது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டனர். இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள் (இவர்களை கலகக்காரர்கள் என்கிறது அமெரிக்கா!). ஈராக் படையைச் சேர்ந்தவர்கள் 15 ஆயிரத்து 196 பேர். கூட்டுப் படை களைச் சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 771 பேர். மிகக் கொடுமையான சித்ரவதைகள் மூலமாக இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கக் கூட்டுப் படைகளால், ஈராக்கியர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட ஆயிரக்கணக்கான சித்ரவதை, பலாத்காரம் மற்றும் கொலைகளை அமெரிக்கா மூடி மறைத்ததும் தெரிய வந்திருக்கிறது.



முன்னாள் அதிபர் புஷ் பதவியில் இருந்த வரையில், 'ஈராக்கில் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள்பற்றிய எந்தக் கணக்கும் இல்லை' என்றே கூறிவந்தது. ஆனால், 'ஈராக் பாடி கவுன்ட்' என்ற அமைப்பு, 'ஒரு லட்சத்து 22 ஆயிரம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்...' என்று சொல்லி வந்தது. கிட்டத்தட்ட அந்தக் கணக்கு விக்கிலீக் ஆவணங்களிலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும், '2007-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பாக்தாத் நகரில் ஹெலிகாப்டர் தாக்குதலில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். சரண் அடைய வந்த நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவர் குடும்பத்தினரை செக் போஸ்ட் அருகில் வைத்து சித்ரவதை செய்து கொன்றனர். இதனால், 'போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக, அமெரிக்காவை சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்!' என்ற கருத்து, பல நாடுகளில் இருந்து வலுப்பெற்று வருகிறது. தவிர, ஈராக் போராளிகளுக்கு ஈரான் நாடும் ராக்கெட் லாஞ்சர், கார் குண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுத உதவிகள் அளித்ததும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க ராணுவ ரகசியத்தை பொட்டென்று போட்டு உடைத் ததால் கோபப்படும் அமெரிக்கா, இந்த இணையதள நிறுவனர் ஜூலியனை வலை வீசித் தேடி வருகிறது. எந்த நேரத்திலும் அமெரிக்காவால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தால் அவர், மாறுவேடத்தில் சுற்றி வருகிறார். கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், இருக்கும் இடம் தெரிந்துவிடும் என்பதால், நண்பர்களிடம் பணமாக வாங்கித்தான் செலவு செய்கிறாராம்!

அமெரிக்காவுக்கு உதவியவர்களுக்கும், ஜூலியனால் வேறு விதமான மண்டையிடிகள் முளைத்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களையும், ஈராக் அரசையும் தூக்கி எறிய அமெரிக்காவுக்கு உதவியவர்களின் உயிர், எந்த நேரத்தில் போகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. காரணம், சமீபத்தில் வெளியான ஆப்கானிஸ்தான் போர் குறித்த விக்கிலீக் ஆதாரங்கள், அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளுக்கு உதவிய, 1,800 பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளது. அந்தப் பெயர்களைக் கண்டறிந்து, 'அவர்களில் யார் யார் எல்லாம் அமெரிக்காவுக்கு உதவினார்கள்' என்பதை சல்லடை போட்டுத் தேடும் வேலையில் இறங்கி இருக்கும் தாலிபன், இதற்காக 9 பேர்கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. ''அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதை தாலிபன் நீதிமன்றம் முடிவு செய்யும்!'' என்று அதன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அறிவித்து உள்ளார். அதேபோல், ஈராக் போரில் அமெரிக்காவுக்கு உதவியவர்களின் பட்டியலை அல்கொய்தா ரெடி செய்து, தண்டனை தர முடிவெடுத்து உள்ளதாம். இதனால், ஈராக்கைவிட்டு அமெரிக்கா முழுமையாக வெளியேறினால், 'தங்களது நிலை என்ன ஆகுமோ?' என்ற கொலை பயத்தில் உள்ளனர் பல அமெரிக்க ஆதரவு ஈராக்கியர்கள்.

இந்த விஷயத்தால் பெரும் தலைவலிக்கு ஆளாகி இருக்கும் அமெரிக்கா, விக்கிலீக் வெளியிட்டுள்ள ஆவணங்களை வரிக்கு வரி படித்து, அதில் தங்களுக்கு உதவியதாக வெளியாகி உள்ள 200-க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களின் பெயர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறதாம். சுருக்கமாகச் சொன்னால், உலக உருண்டைய ஒரு சுற்று உலுக்கிப் பார்த்துவிட்டது இந்த துப்பறியும் இணையதளம்!

ஒபாமாவை வரவேற்கும் பரபரப்பில் இருக்கிறது இந்தியா!


ஒபாமாவை வரவேற்கும் பரபரப்பில் இருக்கிறது இந்தியா!

நவம்பர் 6-ம் தேதி இந்தியா வரும் ஒபாமாவின் முதல் விசிட்... மும்பை!

மும்பையில் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்று, 2008-ல் தீவிரவாதிகளால் தாக்கு தலுக்கு உள்ளான இடங்களையும் பார்த்துவிட்டு, பிறகே டெல்லிக்குப் போகிறார் ஒபாமா.

டெல்லி சர்தார் பட்டேல் மார்க்கில் உள்ள இரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் ஒபாமா மற்றும் அவரது குழுவுக்காக இப்போதே ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில், அதிபர் தங்கப்போவது மௌர்யா ஷெராட்டன் ஹோட்டலில். இந்த ஹோட்டலில் உள்ள மொத்த அறைகளும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் வந்துவிட்டன. அந்த நாட்டின் எஃப்.பி.ஐ. மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லிக்கும் மும்பைக்கும் முன்னரே வந்துவிட்டனர். ஒபாமா தங்கும் நவம்பர் 7, 8 தேதிகளில் இந்த ஹோட்டலுக்குள் மற்ற விருந்தினர்களுக்கோ, உள்ளூர் அதிகாரிகளுக்கோ, டெல்லி போலீஸாருக்கோகூட அனுமதி இல்லை!

18 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், 70-க்கும் மேற்பட்ட கார்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. இவை, மும்பையிலும் டெல்லியிலும் தயாராக இருக்கின்றன. அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான பிரத்தியேக சாட்டிலைட் ஒன்றும் வாஷிங்டனில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு உள்ளதாம்.

இப்படி தூள் பரத்தும் ஒபாமா விஜயம் குறித்து, அரசு வட்டாரத்தினரிடம் விசாரித்தபோது, ''இந்திய - அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பங்கேற்கிறார். அமெரிக்கத் தொழில் அதிபர்களைத் தன்னோடு அழைத்துவரும் ஒபாமா, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்வதில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, அந்தந்தத் துறைகளில் அமெரிக்கத் தொழில் அதிபர்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டு உள்ளார். அமெரிக்கத் தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் அவரது பயணத்தின் முக்கிய நோக்கம்.

இதே மாதிரி, இந்தியத் தொழில் அதிபர்களும் குறிப்பாக ஐ.டி. நிறுவனத்தினரும், ஒபாமா விஜயத்தைப் பயன்படுத்தி, பலனடையும் முயற்சியில் உள்ளனர். ஐ.டி. துறையில் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்குத் தரப்படும் வேலைகளை கட் செய்ய அமெரிக்கா நினைக்கிறது. இதனால், பெருமளவில் இந்தியர்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்த சில முக்கியமான விவரங்களை இந்தியத் தொழில் அதிபர்கள் அமெரிக்க அதிபருக்குத் தெளிவுபடுத்தும் திட்டத்தோடு இருக்கின்றனர். இது தவிர அரசாங்கரீதியில், இந்தியாவுக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் சப்ளை செய்வது மற்றும் ரயில்வே இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது போன்ற விஷயங்களும் நடக்கும்.

இதோடு, அணுசக்தி ரியாக்டர்களை இந்தியாவுக்கு விற்க இருக்கும் தொழில் அதிபர்களும் ஒபாமாவோடு வரலாம் என எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமான அணுசக்தி விபத்துப் பாதுகாப்பு சட்டங்கள் போன்ற வற்றிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன. அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பிரச்னைகளே... ஒபாமாவுக்கு இந்தியாவோடு இருக்கும் முக்கிய அஜெண்டா!'' என்றனர்.

ஒபாமாவின் டெல்லி நிகழ்ச்சிகளில் முக்கியமானது, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இருப்பது. இதையட்டி, நாடாளுமன்றத்தின் மைய அவையில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி சுமார் 20 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசுவார். 'கோல்டன் புக்'கில் கையெழுத்திடுவார். பின்னர், எம்.பி-க்களுடன் கை குலுக்குவார். இது அதிகபட்சமாக ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றாலும், அவரது வருகையை ஒட்டி பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக வண்ணம் பூசி, மேஜை - நாற்காலிகளை சரிசெய்து, புல்லட் ஃபுரூப் கண்ணாடிக் கூண்டுகள் ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகின்றன.

பில் கிளின்ட்டன் 2000-ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றினார். பின்னர் 2006-ல் ஜார்ஜ் புஷ் வந்தபோது, நம் நாடாளுமன்றத்தில் பேசவைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. ஆனால், இடதுசாரிகளின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இந்த முறையோ ஒபாமாவின் உரையின்போது, இடது சாரிகளும் பங்கேற்கின்றனர்.

ஒபாமா விசிட்டில் வேறு எந்த ஊருக்கும் டூர் இல்லை. வெளி நாட்டுத் தலைவர்கள் தவறாமல் விசிட் செய்யும் தாஜ்மஹாலைக்கூட அவர் பார்க்கப் போவதில்லை யாம்!

ஒபாமாவின் இந்த இந்திய விஜயத்தை வைத்து, பாகிஸ் தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் சில எதிர்பார்ப்புகளில் இருந்தனர். ஒபாமாவின் ஆதரவு இந்த விசிட்டின்போது தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், இந்த விவகாரங்கள் பற்றி எதுவும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்பதே இப்போதைய தகவல்.

ஒபாமாவை வரவேற்கும் பரபரப்பில் இருக்கிறது இந்தியா!

ஒபாமாவை வரவேற்கும் பரபரப்பில் இருக்கிறது இந்தியா!

நவம்பர் 6-ம் தேதி இந்தியா வரும் ஒபாமாவின் முதல் விசிட்... மும்பை!

மும்பையில் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்று, 2008-ல் தீவிரவாதிகளால் தாக்கு தலுக்கு உள்ளான இடங்களையும் பார்த்துவிட்டு, பிறகே டெல்லிக்குப் போகிறார் ஒபாமா.

டெல்லி சர்தார் பட்டேல் மார்க்கில் உள்ள இரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் ஒபாமா மற்றும் அவரது குழுவுக்காக இப்போதே ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில், அதிபர் தங்கப்போவது மௌர்யா ஷெராட்டன் ஹோட்டலில். இந்த ஹோட்டலில் உள்ள மொத்த அறைகளும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் வந்துவிட்டன. அந்த நாட்டின் எஃப்.பி.ஐ. மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லிக்கும் மும்பைக்கும் முன்னரே வந்துவிட்டனர். ஒபாமா தங்கும் நவம்பர் 7, 8 தேதிகளில் இந்த ஹோட்டலுக்குள் மற்ற விருந்தினர்களுக்கோ, உள்ளூர் அதிகாரிகளுக்கோ, டெல்லி போலீஸாருக்கோகூட அனுமதி இல்லை!

18 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், 70-க்கும் மேற்பட்ட கார்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. இவை, மும்பையிலும் டெல்லியிலும் தயாராக இருக்கின்றன. அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான பிரத்தியேக சாட்டிலைட் ஒன்றும் வாஷிங்டனில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு உள்ளதாம்.

இப்படி தூள் பரத்தும் ஒபாமா விஜயம் குறித்து, அரசு வட்டாரத்தினரிடம் விசாரித்தபோது, ''இந்திய - அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பங்கேற்கிறார். அமெரிக்கத் தொழில் அதிபர்களைத் தன்னோடு அழைத்துவரும் ஒபாமா, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்வதில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, அந்தந்தத் துறைகளில் அமெரிக்கத் தொழில் அதிபர்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டு உள்ளார். அமெரிக்கத் தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் அவரது பயணத்தின் முக்கிய நோக்கம்.

இதே மாதிரி, இந்தியத் தொழில் அதிபர்களும் குறிப்பாக ஐ.டி. நிறுவனத்தினரும், ஒபாமா விஜயத்தைப் பயன்படுத்தி, பலனடையும் முயற்சியில் உள்ளனர். ஐ.டி. துறையில் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்குத் தரப்படும் வேலைகளை கட் செய்ய அமெரிக்கா நினைக்கிறது. இதனால், பெருமளவில் இந்தியர்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்த சில முக்கியமான விவரங்களை இந்தியத் தொழில் அதிபர்கள் அமெரிக்க அதிபருக்குத் தெளிவுபடுத்தும் திட்டத்தோடு இருக்கின்றனர். இது தவிர அரசாங்கரீதியில், இந்தியாவுக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் சப்ளை செய்வது மற்றும் ரயில்வே இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது போன்ற விஷயங்களும் நடக்கும்.

இதோடு, அணுசக்தி ரியாக்டர்களை இந்தியாவுக்கு விற்க இருக்கும் தொழில் அதிபர்களும் ஒபாமாவோடு வரலாம் என எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமான அணுசக்தி விபத்துப் பாதுகாப்பு சட்டங்கள் போன்ற வற்றிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன. அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பிரச்னைகளே... ஒபாமாவுக்கு இந்தியாவோடு இருக்கும் முக்கிய அஜெண்டா!'' என்றனர்.

ஒபாமாவின் டெல்லி நிகழ்ச்சிகளில் முக்கியமானது, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இருப்பது. இதையட்டி, நாடாளுமன்றத்தின் மைய அவையில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி சுமார் 20 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசுவார். 'கோல்டன் புக்'கில் கையெழுத்திடுவார். பின்னர், எம்.பி-க்களுடன் கை குலுக்குவார். இது அதிகபட்சமாக ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றாலும், அவரது வருகையை ஒட்டி பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக வண்ணம் பூசி, மேஜை - நாற்காலிகளை சரிசெய்து, புல்லட் ஃபுரூப் கண்ணாடிக் கூண்டுகள் ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகின்றன.

பில் கிளின்ட்டன் 2000-ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றினார். பின்னர் 2006-ல் ஜார்ஜ் புஷ் வந்தபோது, நம் நாடாளுமன்றத்தில் பேசவைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. ஆனால், இடதுசாரிகளின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இந்த முறையோ ஒபாமாவின் உரையின்போது, இடது சாரிகளும் பங்கேற்கின்றனர்.

ஒபாமா விசிட்டில் வேறு எந்த ஊருக்கும் டூர் இல்லை. வெளி நாட்டுத் தலைவர்கள் தவறாமல் விசிட் செய்யும் தாஜ்மஹாலைக்கூட அவர் பார்க்கப் போவதில்லை யாம்!

ஒபாமாவின் இந்த இந்திய விஜயத்தை வைத்து, பாகிஸ் தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் சில எதிர்பார்ப்புகளில் இருந்தனர். ஒபாமாவின் ஆதரவு இந்த விசிட்டின்போது தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், இந்த விவகாரங்கள் பற்றி எதுவும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்பதே இப்போதைய தகவல்.

புதன், 2 ஜூன், 2010

பூவின் அலாரம்





eP vd;

Njhs;fspy;

rha;e;j NghJ

vtsT ,jkhf

,Ue;jJ.


vdf;F fpilf;fhj

ghf;fpak; fpilj;jpUf;fpwJ


eP epue;jukhfNt

cwq;fp vOk;

kuf; fl;bYf;F




cd; kbapy;

jiy itj;J

Jhq;fpf; nfhz;bUe;Njd;

epyh

njhpe;jJ.

md;W...........

mkhthirAk; $l





epyj;jpy; mg;gps;

tpOe;jJ.

epAl;ld;

GtpaPh;g;G tpiria

fz;L gpbj;jhd;


vq;Nfh ,Ue;J eP

vd; ,jaj;jpy;

tpOe;jha;.


ehd;

tpopaPh;G tpiria

fz;Lgpbj;Njd;

நட்சத்திரகள் நடுவே உனக்கொரு வீடு





grpf;Fk;

Nghnjy;yhk; - cd;

epidTfis

rhg;gpl Muk;gpj;Njd;

mjdhNyh............

vdf;F grpf;fpwJ .

ehs; KOf;fTk;



,Ul;lhd cd;

$e;jiy ghh;j;jJk;

gakha; ,Ue;jJ.

cd;id neUq;Ftjw;F.....

ntspr;rkhd cd;

Kfj;ij ghh;j;jJk;

Mir te;jJ.

cd; $e;jYf;Fs;Ns

cwq;Ftjw;F



cd; Nriy

vdf;F xU Kiw

Nghh;itahf....,Ue;j NghJ

vtsT ,jkhf

,Ue;jJ

,g;NghJ ePNa

vdf;fhf ,Uf;fpw NghJ

vg;gb ,Uf;fg; NghfpwNjh.........


eP G+f;filf;F

NghfhNj cd;id

thq;Ftjw;F

thpirapy;

epw;ghh;fs;.........



jz;l thsj;jpNy

XLk;...........

uapy; tz;bia Nghy

eP Xbf;nfhz;bUf;fpwha;

vd; Rthr ehsq;fs; Clhf


jpbnud kpd;rhuk;

jilg;gl;L ,Ul;lhfp tpl

mg;gh jpl;bdhh;

kpd;rhu rigia ..............

mk;kh Xbdh

kz;nzz;id thq;f

gf;fj;J filf;F .......

ehd; Nahrpj;Njd; - ,g;NghJ

cd;id mioj;J

tuyhk; vd ................