வியாழன், 15 ஜூன், 2017


கல்
--------

நடந்து கொண்டிருக்கையில் ஒரு சிறு கல்
என் காலில் மோதி கிண்ணி விரலை கிழித்தது.

கல்லின் மீது எனக்கு கோபம் ஏற்பட்டாலும்
பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போடவே
அப்போது நேரமும் சரியாக இருந்தது.

பாறையில் ஊர்ந்து நத்தைகள் வாழ்கின்றன
மலைகளின் மேலே பாம்புகள் பறவைகள் வாழ்கின்றன.

நான் வாழும் வாடகை வீடும்
கல் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடைசியில் நான் புதைக்கப் பட போவதும்
கல் அறையினில் தான்

ஆதலால் அந்த கல்லை நான்
அன்று திட்டவே இல்லை...

விண்ணில் இருந்தும் கல் விழும்
என்று விஞ்ஞானம் சொல்கிறது.

கிட்னியிலும் கல்லு இருக்கிறது என்று
மருத்துவம் நிருபிக்கிறது.

இதனால் அந்த கல்லை இன்று
பழி வாங்க யோசித்தேன் - ஆனாலும்
முடியவில்லை...

சேர்திருக்கும் சில மனிதர்களுக்கோ
இதயம் கல்லாய் இருக்கிறது.
நாம் வழிபடும் பல தெய்வங்களோ
கல்லாகவே இருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக