செவ்வாய், 30 நவம்பர், 2010

என் நகரத்துப் பிரயாணம்

*

சாலை ஒரத்து
----------------
குப்பைத்தொட்டிக்குள்
---------------------
துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது.
-----------------------------------------

போபவர்கள் வருபவர்கள்
------------------------
எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டும்….;
--------------------------------------------
எச்சிலைத் துப்பிக் கொண்டும்….
----------------------------
சுயநலமாக நகர்கிறார்கள்.
--------------------------

ஒருவரேனும்
---------------
நின்று நிதானித்துப் போவதாய்
------------------------------
நான் அவதானிக்கவில்லை…
------------------------------

நாற்றம் என்
--------------
மூக்கையும் தைத்தது.
---------------------
நாக்கையும் பிய்த்தது.
-------------------------

வாடிய வாழை
---------------
இலையில் சுற்றப்பட்ட …
-------------------------
எலும்புகள் தெரியும் படியான…
-------------------------------
போசாக்கு குறைந்து போனதான…ஒரு
----------------------------------
பிஞ்சுக் குழந்தையின்
-------------------------
நிர்வாணமான காய்ந்த சடலம்.
------------------------------

தொப்பிள் கொடியின்
------------------------
துவாரத்திலும்……
----------------
உதடுகளின் ஈரத்திலும்….
---------------------
பால் உறுப்பிலும்…
------------------
மல வாசலிலும்…ஈக்கள்
----------------------------
இரை திரட்டிக் கொண்டிருந்தன.
------------------------------

இரக்கமில்லாமல் ஏன் தானோ..?
----------------------------------
குழந்தை குப்பைத்தொட்டிக்குள்
------------------------------
வீசப்பட்டது.
-----------

வறுமையின் கொடுமையால்…
--------------------------
வீசப்பட்டிருக்கலாம்.
--------------------
முறைதவறிப்பிறந்ததாலும்….
-------------------------------
வீசப்பட்டிருக்கலாம்.
-------------------------
முடமாக பிறந்ததாலும்..
-----------------------
வீசப்பட்டிருக்கலாம் - அல்லது போனால்
-------------------------------------------
பெண்ணாய் பிறந்ததாலும்..
-------------------------
வீசப்பட்டிருக்கலாம்.
--------------------

கேள்விகள் மட்டுமே
---------------------
வரிசையாய் எழுந்தன.
----------------------
பதில்களைத் தவிர…
---------------------.

சடலத்தை அடக்கம்
-------------------
செய்யயாவது.
---------------
யார்… தான்…முன்வருவார்களோ…?
---------------------------------

இனி நாளை..
--------------
காலை தானே வரும்.
--------------------------
“மாநகர சபைக் குப்பைலாறி”
---------------------------------

எனது 5வது கவிதைத்தொகுதி
****************************
“அகதியின்முகம்”இல்இருந்து
****************************** நெடுந்தீவு – முகிலன்

1 கருத்து:

  1. கவிஞர் முகிலன்!
    குப்பைத் தொட்டியில்
    கண்டுபிடித்த கவிதை
    குதறி எடுத்தது -
    ஈரல் குலையை!
    பதறின -
    பண்பாட்டு நரம்புகள் !
    எதார்த்தமாய் வடிந்த
    ஈரச் சொற்களில்
    இதயம் கனத்தது!
    தொடர்பில் மகிழ்வோம்-
    தொடர்ந்து!
    என்-
    கங்கை மணிமாறன்.வேர்ட் பிரஸ் .காம்
    பாருங்கள்!
    எழுச்சிக் கவிஞர் கங்கை மணிமாறன்

    பதிலளிநீக்கு