வியாழன், 25 ஆகஸ்ட், 2016

முட்கம்பி வேலியாலும் மண் மூட்டைகளாலும் சுற்றி
அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் குடிசை.
யாரும் நெருங்கி வராத படி மிதி வெடிகளும்
தாக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டன் காலத்து குடிசை அது - அந்த
குடிசைக்குள்தான் நாம் குட்டிகளாக ஈணப்பட்டோம்.
சாணி மொழுகிய திண்ணையின் வாசலில் அம்மா
போடும் மாக் கோலத்தின் அடையாளம் இருக்குமா..
.
தூசி படிந்தாவது அப்பாவின் புகைப்படம் - இப்பவும்
சுவரில் தொங்கிக் கொண்டிருக்குமா...
தேங்காய் எண்ணை தடவி வைத்த மண்வெட்டி
பிக்கான் கத்தி அரிவாள்களாவது அப்படியே இருக்குமா...
கறையான் அரித்து திண்டாலும் பறவாயில்லை
அடகு சீட்டுகளின் - திருமண சான்றிதளின்
பள்ளிக்கூட ஆவணங்களின் - பிறப்பு பத்திரங்களின்
ஏதேனும் அடித்துண்டுகளாவது மிஞ்சி இருக்குமா..
அக்காவுக்கு நிறுவனக்காரர்கள் தந்த தையல் மிசின்
நான் முதல் மாத சம்பளத்தில் வாங்கி வைத்த கண்ணாடி அலுமாரி
அறையின் மூலையில் கிடந்த நாற்காலி கோர்க்காலி கோழிக் கூடு
ஏதாவது எமக்காக இருக்குமா...?
"இன்னும் நாம் எங்கள் குடிசைக்கு செல்லவில்லை" - ஆனாலும்...
எங்கள் குடிசை முட்கம்பி வேலியாலும் ... மண் மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதாம்.
நெடுந்தீவு முகிலன்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016


கரப்புக்குள் கோழியும் குஞ்சும்  குறுணால் அரிசியையே பங்கிட்டு தின்கிறது.
என் வளவுக் கடப்பை திறந்து எனைக் கான வரமாட்டாயா...

உமிக் கரியில் பல் விளக்கி  தென்ணோலை கிழித்து நாக்கு வளித்து
முடியை மிளித்திளுத்து சேலைத்தலைப்பால் முடிந்துகட்டி காத்துக்கிடக்கிறேன்.

பூக்கம் பாளையால் முற்றம் பெருக்கி  மஞ்சல் கரைத்து தெழித்து - கறி கழுவும்  இடத்தில் நட்டு வழர்த்த கறிவேப்பிலை மரமாய்  வாசனையோடு பூத்திருக்கிறேன்.

சாணி மொழுகிய திண்னையில்  திருவலையில் உன்னை இருத்தி
வாழையிலையில் கை குத்தரிசி சோறு  போட ஏங்கி நிற்கிறேன்.

செத்தைக்குள் சொருகிக் கிடக்கும் கடுதாசிகளிலே  என் ஆசைகளை கிறுக்கி விட்டு - சுடு தேத்தண்ணியில்  விழுந்த கட்டெறும்பாய் துடித்துக்கொண்டிருக்கிறேன்.

கோர்காலியில் விரித்த சாய் ஓலை பாயோடும்  தலைக்கு வைக்கும் உடுப்பு பொட்டாளியோடும்  நூந்து போன போத்தில் விளக்கோடும்  என் இரவுகளை கடக்கின்றேன்.

சாமத்தில் படலையில் மாடு முட்டினாலும்  நீ தான் என்று - என் கண் விழித்த பின்புதான்  நாயே குரைக்கும்.

நெடுந்தீவு முகிலன்
கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்  அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில்  மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து  இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்
வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

தலையில் ஒரு குடம்
இடுப்பில் ஒரு குடம்.

தாகத்தோடு குடிசையில் தவிக்கும்
தன் குழந்தைகளை நினைத்து கொண்டே
ஓட்டமும் நடையுமாக ஒருத்தி...

வியர்வை துளிகளில் நனைந்தாளோ...
கண்ணீர் துளிகளால் தன்னை கழுவினாளோ - இல்லை  குடத்திலிருந்த தண்ணீரின் தளம்பலில்  மூழ்கிப்போனாளோ தெரியவில்லை  பாதி ஈரத்தோடும் ஏதோ அவசரத்தோடும் சுடு மணலில் நடந்துகொண்டிருந்தாள்.

அவள் வீட்டு வாசலை அண்மிக்கையில்..
.
குழந்தைகள் ஆழுக்கொரு பாத்திரத்தோடு  வயதுக்கேற்ற வரிசையாய் ஓடி வந்தனர்.

அப்போது மழை பொழிந்தது....

குழந்தைகளின் பத்திரங்கள் வானத்தை  நோக்கியே அண்ணாருகின்றன.

அந்த ஏழைத்தாயை வருத்திய துயரை நினைத்து வானமே அழுதது - ஆனால்
மனிதர்கள்..?..?...?

நெடுந்தீவு முகிலன்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

குண்டு மழைக்கு யார் குடை பிடிப்பது
இரத்தத்தில் நனைந்த இனம் நாம்.

எதிரிகளின் தாக்குதலினை முறியடித்தோம் - துரோகிகளின்
காட்டிக்கொடுப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டோம்.

குருவி சுட தெரியாதவனெல்லாம் எங்கள் குரல் வளைக்கு குறி வைக்க ஏங்கி நின்றோம்.

பிணங்களை கடந்து போகும் பயணத்திலும் பாதிப் பேர்
ஊணங்களாக்கப்பட்டுக்கொண்டே இடம்பெயர்தோம்.

தோட்டாக்களினதும் பீரங்கிகளிதும் சத்தத்துக்கு பாதிக்கப்பட்ட
நமக்கு நச்சு வாயு புது பாடமாகவே இருந்தது.

உடமைகளோடு ஓடி வந்தோம் - கொஞ்ச தூரத்தில் அவைகளை விட்டு உறவுகளோடு ஓடினோம் அதுக்கு பிறகு உயிரோடு மட்டுமே ஓடினோம்

சரணடைய கை தூக்கியவர்களும் பாதுகாப்புக்காய் வெள்ளை கொடி காட்டியவர்களும் சுடப்பட்டார்கள். எஞ்சியவர்களில் சந்தேகமானவர்கள் எல்லைகளில் வைத்தே களையப்பட்டார்கள்.

கடத்தி சென்றவர்களையே... காணாமல் போனவர்கள் என்று கேட்க்கின்றோம் - அது பழைய காக்கா பாட்டியை
ஏமாத்திய வடைக் கதை என...புதிய நரிகள் கதை சொல்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்
கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்
அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை
விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில் மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து
இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை
கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்
என் சாவுக்கு யாருமே சம்மந்தமுமில்லை
இது என் சுய விருப்பமே...

நான் நிரந்தரமாகவே உறங்க ஆசைப்படுகிறேன்

அவசரத்தில் எடுத்த முடிவு கிடையாது - ஆழ்ந்த
யோசனையின் பின் நான் எனக்கு கொடுக்கும் விடிவு

என்னை இறுதியில் என் ஊர்சாலை
வழியாகவே....கொண்டு செல்லுங்கள்.

எனக்காக எவரும் அழவேண்டாம் - நான்
எவ்வளவோ அழுதான் இந்த தீர்வுக்கே வந்தேன்

ஒரு வேளை சில....அனுதாப விழிகள்
எனக்காக அழதால் கைக்குட்டை கொடுத்து சமாளியுங்கள்.

எனக்காக மலர்வளையங்கள் வேண்டாம். வீணாய் பூக்களை கொலை செய்யாதீர்கள் - அதுகளாவது நின்மதியாய் ஒரு நாளாவது வாழட்டும்.

கண்ணீர் பதாதைகள் ஒட்ட வேண்டாம். - அண்ணாந்து பித்து தின்னும் பசுக்களின் குடலில் ஒட்டுவதோடு  பால் குடிக்கும் கன்றுக்குட்டிகளுக்கும் உபாதைகள் ஏற்ப்படக் கூடும்.

இது வரை என் வேதனைகளை வேடிக்கை பார்த்தீர்கள் - முடிந்தால்
நான் முடிவில் விட்டுப்போகும் எலும்புக் குவியல்களுக்காவது
சுதந்திரம் கொடுங்கள்.

நான் இந்த முடிவுக்கு முயற்சித்ததே.... அடுத்த பிறவி இருக்கு என்ற நம்பிக்கையில் அல்ல  என் நின்மதிக்காகவே - ஆனாலும் என் நின்மதி நிரந்தரமானதல்ல... எப்படியாவது நீங்களும் அங்கு வந்து விடுவீர்களே...


நெடுந்தீவு முகிலன்