செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

தலையில் ஒரு குடம்
இடுப்பில் ஒரு குடம்.

தாகத்தோடு குடிசையில் தவிக்கும்
தன் குழந்தைகளை நினைத்து கொண்டே
ஓட்டமும் நடையுமாக ஒருத்தி...

வியர்வை துளிகளில் நனைந்தாளோ...
கண்ணீர் துளிகளால் தன்னை கழுவினாளோ - இல்லை  குடத்திலிருந்த தண்ணீரின் தளம்பலில்  மூழ்கிப்போனாளோ தெரியவில்லை  பாதி ஈரத்தோடும் ஏதோ அவசரத்தோடும் சுடு மணலில் நடந்துகொண்டிருந்தாள்.

அவள் வீட்டு வாசலை அண்மிக்கையில்..
.
குழந்தைகள் ஆழுக்கொரு பாத்திரத்தோடு  வயதுக்கேற்ற வரிசையாய் ஓடி வந்தனர்.

அப்போது மழை பொழிந்தது....

குழந்தைகளின் பத்திரங்கள் வானத்தை  நோக்கியே அண்ணாருகின்றன.

அந்த ஏழைத்தாயை வருத்திய துயரை நினைத்து வானமே அழுதது - ஆனால்
மனிதர்கள்..?..?...?

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக