வியாழன், 18 ஆகஸ்ட், 2016

தாழ்வு மனபான்மையோடு முடங்கி அடங்கி கிடப்பவர்களே
 தன்னம்பிக்கையை தொலைத்தவர்களாக இருக்கிறார்கள்.

தொலைத்த அந்த நம்பிக்கையை திரும்ப தேடி எடுக்காதவர்கள்
தோல்விகளுக்கே சொந்தமாகிவிடுகிறார்கள்.

அவமானத்தையே அங்கிகாரமாக எடுத்து கொண்டவர்கள்
வெற்றி பெற்றிருக்கிறார்கள்.-

விமர்சனத்தை ஏற்கவே பக்குவப்படாதவர்கள் 
ஆதங்கப்பட்டே அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையை ஏக்கமாகவே அனுபவிப்பவர்களால்  சிந்திக்கவோ முயற்சிக்கவோ முடியாது - இருக்கும் நிலையினையும் இழக்க நேரிடும்.

கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் கால்கள் முளைக்கும் என காத்திருப்பவர்களுக்கு - கண்ணீரை  தவிர எதுவுமே கடைசியில் மிச்சமிருக்காது.

தனித்துவமாக இருப்பவர்களே உயர்ந்திருக்கிறார்கள் என மனதளவில் நினைப்பவர்கள்தான்  முதலில் குறைபாடானவர்கள்.

எந்த நிலைக்கு போனாலும் அதற்கு அடுத்த நிலை  எல்லோருக்குமே காத்திருக்கிறது - ஆனால் மரணம் மட்டுமே யாவருக்கும் பொதுவாயிருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக