வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

காணாமல் போன(அ)வள்…

எனது உயரம் இருப்பாள்.

கொலுசு கூச்சப்பட நடப்பாள்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.

கன்னத்தில் குழி விளச்சிரிப்பாள்.

பேர் ஊர் தெரியாது – ஆனால்
தமிழ் பேசுவாள்.

பஸ்சில் ஐன்னல் ஓரத்தில்தான்

உட்க்காந்து பயணிப்பாள்.

தாவணி அணிந்திருப்பாள் - அடிக்கடி துப்பட்டாவை சரிபார்ப்பாள்.

கீழ் உதட்டின் ஓரத்தில் ஒரு மச்சமும் இருக்கிறது.

உள்ளங்கையில் மருதாணி பூசி இருப்பாள்.

கைக்குட்டையை கசக்கி பிடித்திருப்பாள்.

மேலும் சொல்வதானால்…. கூந்தல் இரவைப் போலவும்
முகம் நிலவைப் போலவும் இருக்கும்.

கடைசியாய் மஞ்சல் தாவணியில்தான் காணாமல் போனாள்.

தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் கேட்கும் சன்மானம் வழங்கப்படும் - அது என் உயிர் என்றாலும் பரவாய் இல்லை…

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக