வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

என் சாவுக்கு யாருமே சம்மந்தமுமில்லை
இது என் சுய விருப்பமே...

நான் நிரந்தரமாகவே உறங்க ஆசைப்படுகிறேன்

அவசரத்தில் எடுத்த முடிவு கிடையாது - ஆழ்ந்த
யோசனையின் பின் நான் எனக்கு கொடுக்கும் விடிவு

என்னை இறுதியில் என் ஊர்சாலை
வழியாகவே....கொண்டு செல்லுங்கள்.

எனக்காக எவரும் அழவேண்டாம் - நான்
எவ்வளவோ அழுதான் இந்த தீர்வுக்கே வந்தேன்

ஒரு வேளை சில....அனுதாப விழிகள்
எனக்காக அழதால் கைக்குட்டை கொடுத்து சமாளியுங்கள்.

எனக்காக மலர்வளையங்கள் வேண்டாம். வீணாய் பூக்களை கொலை செய்யாதீர்கள் - அதுகளாவது நின்மதியாய் ஒரு நாளாவது வாழட்டும்.

கண்ணீர் பதாதைகள் ஒட்ட வேண்டாம். - அண்ணாந்து பித்து தின்னும் பசுக்களின் குடலில் ஒட்டுவதோடு  பால் குடிக்கும் கன்றுக்குட்டிகளுக்கும் உபாதைகள் ஏற்ப்படக் கூடும்.

இது வரை என் வேதனைகளை வேடிக்கை பார்த்தீர்கள் - முடிந்தால்
நான் முடிவில் விட்டுப்போகும் எலும்புக் குவியல்களுக்காவது
சுதந்திரம் கொடுங்கள்.

நான் இந்த முடிவுக்கு முயற்சித்ததே.... அடுத்த பிறவி இருக்கு என்ற நம்பிக்கையில் அல்ல  என் நின்மதிக்காகவே - ஆனாலும் என் நின்மதி நிரந்தரமானதல்ல... எப்படியாவது நீங்களும் அங்கு வந்து விடுவீர்களே...


நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக