வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

அதிகாலையில் எழுந்து அடுப்பு பத்தவைத்து

சூடான தேநீர் தயாரித்து 
தலைமாட்டில் வைத்து

பிள்ளைகளை தடடித்தடவி எழுப்பி

பாடப்புத்தகங்களை எடுத்துக்கொடுத்து

கணவனின் உடைகளுக்கும் சேர்த்து ஸ்திரி போட்டு

மறுபடியும் அடுப்படியில் புகை ஊதி ஊதி காலை சாப்பாடும் சரி செய்து

குழந்தைகளை குளிப்பாட்டி உணவூட்டி உடுப்புடுத்தி

பள்ளிக்கு அனுப்பிவிட்டு

தண்ணீர் இல்லாவிட்டால் - மின்சாரம் தடைப்பட்டால் கணவனின் திட்டுகளையும் சமாளித்து

வீடு வளவு சுத்தம் செய்து

பழைய பாத்திரங்கள் கழுவி

வெயிலிலும் நடந்து சந்தைக்குப்போய் காய்கறி வாங்கிவந்து

உலையை கொதிக்க வைத்து 

ஊறவைத்த உடுப்புகளை  அலம்பி காயவிட்டு

சமையல் அறைக்கு ஓடிவந்து சாதம் ஆக்கிவிட்டு

குழந்தைகளை அழைத்து வந்து

ஆவி பறக்க பறக்க சாப்பாடு கொடுத்து

கணவனுக்கு போன் போட்டு 

மதிய உணவுக்கு வர அழைப்பு விட்டு

வராவிட்டால் - தானும் சாப்பிடாமல் இருந்துவிட்டு

குழந்தைகளை தூங்க வைத்து

பக்கத்து வீட்டு பெண்களை அழைத்து ஊர்க்கதை பேசி சமாவைத்து

மாலையில் காப்பியும் கொடுத்து கடிக்கவும் ஏதாவது கொடுத்து

ஒவ்வொரு குழந்தைகளாய் முகம் - கால் - கை கழுவி
சாமி கும்பிடவிட்டு

 அ - ஆ சொல்லிக்கொடுத்து

மறுபடியும் சமையல் செய்து

கட்டிலுக்கு கொசுவலையும் போட்டு
 தலையனையும் போட்டு

எல்லோருக்கும் சாப்பாடும் கொடுத்து

சந்தோசமாய் கணவனையும் கட்டிப்பிடித்து தூங்குவதற்க்கா..?..?

"கல்யாணத்துக்கு முன் பெண் வீட்டாரிடம் இருந்து லட்சம் லட்சமாய் வரதட்சனை வாங்கப்படுகின்றது"

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக