வியாழன், 18 ஆகஸ்ட், 2016


எல்லோரும் கனவு காண்கிறார்கள்

இந்த உலகில் சுவாச காற்றும் இதுவுமே இலவசம்

இழந்ததை திரும்ப மீட்பதும் இல்லாததை நினைத்து ஏங்குவதுமாய்
ஆளுக்கு ஆள் அது வேறுபடுகிறது.

தூக்கத்தின் பிறகு வருவதும் தூங்விடாமல் தடுப்பதுமாய்
இலக்குகளை பொறுத்து அது மாறுபடுகிறது

உடம்பிலிருக்கும் கடந்த கால காயத்தின் தழும்பு வலிக்காது - ஆனால்
கீறலின் தடையமே இல்லாத மனசு நோகும்.

மன்னிக்க முடியாதவையையும்  மறக்க முடியாதவைகளையும் சில வேளைகளில் கெட்ட கனவாக நினைத்து விடுகிறோம்.

வானத்தில் சிறகை விரிக்கும் பறவையையும் வனத்தில் வேட்டையாடும் விலங்கினையும் ஒன்றாக ஒப்பிட முடியாததாயினும் இரு தேடலும் ஒரு தேவைக்காகவே...

பசியோடிருப்பவனின் கனவு உணவு  அளவுக்கு மீறி சாப்பிட்டவனின் கனவு செமிபாடு.

மக்கள் விடுதலைக்கான கனவோடு தூங்குகிறார்கள்.
போராளிகள் எல்லையில் துப்பாக்கியோடு கண்விழிக்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக