வியாழன், 18 ஆகஸ்ட், 2016

பஞ்சாபியின் இடுப்பு நாடாவையே சரியாக கட்டிக்க தெரியாத வயதில் இருப்பவளை - ஒருத்தனுக்கு பெஞ்சாதியாய் கட்டி கொடுக்கிறார்கள்.

ஒரு பொண்னு வயதுக்கு வந்திட்டா போதும்
ஏரியாவில் இருக்கிற பசங்க பாக்கிறாங்களோ இல்லையோ வீட்டில இருக்கிற கிழவிகள் தொல்லை தாங்க முடியல..

அந்த முதலாழியை தெரியும் இந்த காசுக்காரனை தெரியும் சொத்து வெளியே போகக்கூடாது நம்ம சாதியிலதான் கட்டிக்கொடுக்கனும் 

படிப்பு எல்லாம் தேவையே இல்லை பத்தே மாதத்தில ஒரு சிங்கக் குட்டியை பெத்து குடுத்திரு எண்ணு சாவடிக்கிறாங்க..

பக்குவப்படமுதல் திருமணம் என்பது கொடுமையானது அதைவிட அறிவு அரும்பும் முன்னே அம்மாவாகுதல் துயரமானது..

சந்ததியை பெருக்குதலை பற்றிய சிந்தனையில் மட்டுமே இருந்திட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு யார் கஞ்சி ஊத்துவது.

வேலைக்கு போகும் பெண்கள் கொஞ்சம் இந்த பிரச்சனையிலிருந்து தப்பிவிட்டார்கள் என்றாலும் ஆங்காங்கே கொலை செய்யப்படுகிறார்கள் - ஆனால்  அடுப்பு ஊதும் குமரிகள் முறையாய் மாட்டிவிட்டடார்கள்.

அறைக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் மெதுவாய்
வெளியே வெளிச்சத்துக்கு வந்து விட்டார்கள் என்றால் - இப்போது சின்ன வயதில் கட்டிக் கொடுத்து திரும்பவும் சிறைக்குள் அடைக்கிறீர்கள்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக