வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நான் வயிற்றில் இருக்கையில் ஆண்மகன் 
என்று அம்மா கனவு கண்டாளாம்.

பிரசவத்தின் பிற்பாடு அப்பாவின் வருமானத்தில் இருந்து பத்து விகிதம் வரதட்சணைக்காய் வங்கிக்குப் பறந்தது.

என் பூப்பெய்தல் காலத்தில் சேமிப்பில் இருந்த சில பகுதி தீட்டுக்குச் செலவானது.

பட்டப்படிப்பே என் கனவான போதிலும்ப ள்ளிக்கூடம் கூட பாதியிலே தலைமறைவாக்கப்ப ட்டது.

கொஞ்ச நாளாய் என் படுக்கை விரிப்பில் சிதறிகிடந்தன. வெளிநாட்டு மாப்பிளைகளின் “கோட்” அணிந்த புகைப்படங்கள்.

அவர்களை தெரிவு செய்வதற்குள்  பலர் தேர்வு எழுதிப்போனார்கள்.

“மணமகன்” தேவைக்கு பத்திரிகைகளில் விளம்பரம் எழுதியும் ஊனமுற்றவனேனும் உதவ முன்வரவில்லை…

காதலிக்க பின்னால் வந்தவனும் செவ்வாய் தோசத்தால்  திரும்பிப் போனான்.

கல்யாணமே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் - காரணம் சிலவேளை…. எனக்கும் பெண்குழந்தை பிறந்து விட்டால்….

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக