வியாழன், 18 ஆகஸ்ட், 2016


விலைவாசிப் பத்தினி - எப்போது கற்பழிக்கப்பட்டாளோ….
வறுமைக் குழந்தைகளுக்கு தந்தை யார் என்றே தெரியவில்லை..

புரிந்துணர்வுச் சகோதரிக்கு கொடுமையை சம்மந்தம் பேசி…
மனிதாபிமானம் - மாமா வேலை பார்க்கிறது.

அநியாம் இரண்டாம் தாரமாய் சமத்துவத்துக்கும் தாலிகட்டித்…
தம்பதியாகியது.

ஜனநாயக மாப்பிளை சமுதாய மனைவிக்கு விவகாரத்துக்கொடுத்துவிட்டு..
அதிகார மைந்தர்களின் ஆணவப்புதல்விகளோடு…மட்டும் கள்ளத்தொடர்பு
வைத்துக்கொள்கிறார்கள்.

அகதி யுவதிகளுக்கு சீதனம் சத்திரவதை ஆகிறது.

அனாதைத் தாய்மார்களிடம் வேதனை களவில் பால் குடிக்கிறது.

இனவாதப் பென் சிறுபான்மை இளைஞர்களோடும் உடல் உறவு வைத்துக் கொள்கிறாள். உரிமை வாரிசுகளுக்கு சித்திக்கொடுமையும் செய்கிறாள்.

சட்ட மங்கை மலடாகவே இருந்து கொண்டு.. சமரச ஆண்மையை
குறை சொல்லுகிறாள்.

அடிமைகளை குளோனிங் முறையில் இனப்பெருக்கிவிட்டு.. 
விரல் சூப்ப விடுகிறாள்.

சமாதான குமரிக்கு ஒப்பந்த திருமணத்தில் திருப்தி இல்லையாம்.

அதிகார ஓரினச்சேர்க்கைக்கே உடன்படுகிறாள்.

நெடுந்தீவு – முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக