வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

திபாவளிக்கு ஊருக்கு வருவதாக
சித்திர வருட பிறப்பின் போது வீட்டுக்கு
ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

என் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் 
என் வீட்டுக்காரர்களுக்கு...லீவு கிடைக்காததால் வரவில்லை
என்ற வருத்தத்தை இன்னமும் தெரிவிக்கவில்லை.....

மலிவு விற்பனையில் அம்மாவுக்காய் வாங்கி
வைத்த சேலையையும் குளிர் தாங்க முடியாமல்
போர்வையாக பயன்படுத்தி விட்டேன்.

தங்கச்சிக்கு பார்த்து வைத்த சிவப்பு கல்லு
தூக்கணமும் முற் பணம் கட்டாததால்
விலைப்பட்டு விட்டது.

பட்டாசு வெடிகளாவது வாங்கி தம்பிக்கு பார்சல்
அனுப்பவும் தற்போது கையில் சல்லி காசு இல்லை....

நண்பர்களுக்கு கொடுக்க சொல்லி.. நண்பர்
வாங்கி தந்த விஸ்கி போத்தலை...பயணம் நின்று
விட்ட கவலையில் நானே முழுங்கிவிட்டு...

பொங்கலுக்கு ஊருக்கு வருவதாக
வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதுதிக்கொண்டிருக்கிறேன்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக