வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

உன் பாதணிகளின் ஸ்பரிசத்தால் என் தேடுதல் ஒரளவு நிறைவுக்கு வந்தது.

நீ உள்ளே இருப்பதை காட்டிகொடுத்தது ஒட்டி பிறந்த குழந்தைகளாய் நெருங்கிக்கிடந்த உன் காலணிகளே...

சங்கீத வகுப்போ வழிபாட்டுக்கான ஒன்று கூடலோ ஏதோ ஒன்று அந்த அறைக்குள் வணக்கத்துக்குரியதாய் ப்பேறிக்கொண்டிருக்கிறது.
உன் பாதங்கள் பட்டு பூமி பெறப்போகும் பாக்கியத்தை இந்த பாதணிகள் பங்கிட்டுக்கொண்டிருக்கிறது.

நீ வரும் வரை காத்திருக்க பழகிய செருப்புகள் என் தவிப்பை ஒரு போதும் உனக்கு எடுத்து கூறாது...

நீயும் நானும் இந்த காலணிகள் போலவும் இதுவரை நெருங்கியும் இருக்கவில்லை....

உன் ஞாபகமாய் உன் பாதணிகளை களவாடி கொள்வதற்கு மனசுக்கு பிடிக்கவில்லை...

இதை சாட்டாக வைத்து யாரேனும் அவசரமாய் புது காலணிகளை உனக்கு பரிசளிக்க கூடுமே...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக