வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016


அம்மாவின் பிரேதத்திற்கு...
புதுத்துணிவாங்கவும்
சாவு வீட்டுக்கு பந்தல் போடவும்...
எட்டுச் செலவுக்கு படையல் செய்யவுமே..
.தூரதோசத்தில் வசிக்கும் என் சகோதரர்களின்
 காசோலை கைகள் நீண்டன.

அம்மா உயிரோடு இருக்கையில்
 கந்தல் துணிகளை சலவை செய்ததும்..
.குடிசை முகட்டுக்கு கிடுகு அடைத்ததும்...
பசியோடு தவிக்கையில் கஞ்சி கொடுத்ததும்....
என் வரண்ட கைகள் மட்டுமே...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக