வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நீயும் நானும் பிரியமாட்டோம் என்று
ஒன்றுமில்லை - இதுவரை சேர்ந்திருந்ததிற்கு
ஒரு சில காரணங்கள் இருந்திருக்கிறது.

தூரத்தில் பார்த்து பழுகுவதோடு எல்லாம் 
முடிந்து விடவில்லை - திரும்ப திரும்ப
நெருங்குவதற்கு நமக்குள் ஏதோ ஒத்துப்போனது.

துன்பம் வரும் போது தொடர்பு
துண்டிக்கப்பட்டதற்கு நான் புலம்பவில்லை.. இந்த சந்தர்பம்
இன்னோர் துனையை தேர்ந்தெடுக்க உனக்கு
வாய்ப்பு வழங்கியிருக்கிறது என பெருமைப்படுகிறேன்.

விருப்பமில்லாத வாழ்தலிலிருந்து விலகுவதை
நானும் விரும்பி ஏற்கிறேன் - ஆனால்
மறைமுகமாக என்னை பற்றி நீ அவதூறாக
பொய் பேசுவதால் கொஞ்சம் வருத்தப்படுகிறேன்.

இந்த இடைவெளி என்னை தனிமையில்
தள்ளி விட்டதென்றாலும்- உன்னால்
என் மனம் முழு அமைதியடைந்திருக்கிறது.

என்னோடு வா என்று இனிமேல்
உன்னிடம் வந்து நான் கெஞ்சப்போவதில்லை ....
திரும்பி வந்து விடாதே - இப்படியே
ஒதுங்கிவிடு என கை தூக்கி வழியனுப்புகிறேன்.

அறியாமையினால் தவறு நிகழ்திருப்பினும்
யாரிடமும் நீ நீதி கேட்க தேவையில்லை - நானே
தப்பினை ஒத்துக்கொள்கிறேன்.

தண்டனை வழங்குவதற்கு உனக்கு
எந்த தகுதியுமில்லை - ஆயினும்
போக போக என் வலி ஆறும் என நம்புகிறேன்.

அழிவில் இருந்து உன்னை பாதுகாப்பதற்காக..
நிரந்தரமாகவிருந்த உறவையே நீ நிராகரிப்பது
உன் பக்க நியாயம்தான்.

துரோகத்தை நம்பி பின் ஏமாருவதே
என் பழக்கமாகி விட்டதால் - உன் பிரிவு
எனக்கு எந்த புதுத்துயரையும் தரப்போவதில்லை...

காலம் தாழ்த்தாமல் இந்த முடிவுக்கு
நீ இப்போதே முயற்சித்ததற்கு - நான்
நன்றி கூற கடமைப்படுகிறேன்.

சிறகுகளை இழந்த பின்புதான் - நீ
கால்கள் இருப்பதையே கண்டு கொண்டாய்.
இனி நீ நினைத்தாலும்... என்னோடு
சேர்ந்து பறக்க முடியாது.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக