வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நிரந்தரமான நிலையில் எதுவுமே இருக்க முடியாதா - அன்புக்கும்
ஆயுட் காலம் வைத்து பழகுகிறார்கள்.

நினைவுகள் ஞாபக மறதியாகிப் போகிறது - கனவு
பாதி தூக்கத்திலே கலைகிறது.

நம்பிக்கை துரோகமாகவும் - அரவனைப்பு அருவருப்பாகவும் காலம் கற்பிக்கிறது.

பருவ மாற்றத்தின் போதே - பலருக்கு
குணம் மாறுகிறது மனம் டுமாறுகிறது.

காயம் வைத்தவர்கள் காலம் போக்கில் - தழும்புகளை  பார்த்து நடிப்பு கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஆசைகளையே அனுபவிக்க துடிப்பவர்களின்  செவிகளுக்கு - விசுவாசத்தின் குரல் கேட்காது.

வீரியம் குறைந்த விரல்களை - இங்கே  வீணைகள் இசைக்க அனுமதிக்காது.

வேதனைகளை யாரும் விரும்பி ஏற்ப்பதில்லை - கூட  இருப்பவர்களே அதை இனாமாக கொடுத்து விட்டு...  தூர நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

வருந்தும் இதயங்களுக்கு புதிய கரங்கள்  மருந்திட நினைக்கிறது - பழைய துயரங்களே ஒதுங்கி விடுங்கள்.

நெடுந்தீவு முகிலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக