வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016


 உனக்காக காத்திருந்தேன்

மழை வந்தது.

குடையை வாங்கவும் - மழை நின்றது.

மழை நின்றதும்

நீ தூரவாய் தெரிந்தாய்.

உன்னை நோக்கியே ஓடினேன்

மழை திரும்பவும் பொழிந்தது...

விட்ட இடத்திலே குடையை எடுத்து மறுபடியும் உன் பின்னால் ஓடினேன்.

நீயோ யாரோ ஒருவனின் குடைக்குள் நனையாமல் நெருக்கமாய் நடந்து 
கொண்டிருந்தாய்.

உன் நிஐத்தை காட்டவே விட்டு விட்டு பெய்த மழைக்கு
என் மனப்பூர்வமான நன்றிகள்.

நெடுந்தீவு முகிலன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக