வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இலக்கிய பெண்ணுக்கு எழுத்துகளால்
தாலி கட்டினேன்.

உணர்வுகளால் சேலை கட்டினேன்.

வார்த்தை குங்குமத்தை தொட்டு - பேனாவால்
பொட்டு வைத்தேன்.

சிந்தனை கட்டிலிலே நினைவுகளை
தாலாட்டி உறங்க வைத்தேன்.

வெள்ளை தாள் மெத்தையிலே - மொழிக்கு
முத்தம் கொடுத்தேன்.

மறை நிலை உத்திகளை உவமைகளால்
கட்டிப்பிடித்தேன்.

எதுகை மோனைகளால் அழகிய போர்வை விரித்தேன்.

ரகசிய வரிகளால் இரவை வரைந்தேன். அந்தரங்க சொற்களுக்கு அடிக்கோடிட்டேன்.

கருவறையில் கற்பனையை - மகவுவாய் சுமக்க விட்டடேன்.

பிரசவ காலத்தில் தந்தை தகுதி பெற்றேன். எல்லா குழந்தைகளையும் கவிதை என்றே கணக்கு வைத்தேன்.

வாசகர் முன்பள்ளிக்கு நாள் தோறும் அனுப்பி வைத்தேன் - ஆனால்
இப்போதும் என் மனைவி கர்பமாகவே இருக்கிறாள்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக