வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நீண்ட நேரமாக யாரோ
கதவை தட்டிக்கொண்டிருந்தார்கள்.

குளியலறைக்குள் நிர்வாணமாய்
நின்று கொண்டிருந்ததால் தாமதமாகிவிட்டது.

கொலுசு சப்தங்கள் நான் உள்ளே இருப்பதை
வந்தவர்களுக்கு உறுதிப்படுத்தி விட்டன.

ஆடைகளை அவசரமாய் மாட்டி கொண்டு
கதவை திறக்க முன்னேறினேன்.

கதவு இன்னும் மோசமாய் தட்டுப்பட
கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன்.

என்னை சந்திக்க இந்த இருளில் யார் வருவார்கள்
நிதானித்து யன்னலோரத்தால் எட்டிப்பார்த்தேன்.

நல்ல வேளை நான் கதவு திறக்கவில்லை….

அணிந்த என் ஆடைகள் திரும்பவும் களையப்பட்டிருக்கும்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக