செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

தலையில் ஒரு குடம்
இடுப்பில் ஒரு குடம்.

தாகத்தோடு குடிசையில் தவிக்கும்
தன் குழந்தைகளை நினைத்து கொண்டே
ஓட்டமும் நடையுமாக ஒருத்தி...

வியர்வை துளிகளில் நனைந்தாளோ...
கண்ணீர் துளிகளால் தன்னை கழுவினாளோ - இல்லை  குடத்திலிருந்த தண்ணீரின் தளம்பலில்  மூழ்கிப்போனாளோ தெரியவில்லை  பாதி ஈரத்தோடும் ஏதோ அவசரத்தோடும் சுடு மணலில் நடந்துகொண்டிருந்தாள்.

அவள் வீட்டு வாசலை அண்மிக்கையில்..
.
குழந்தைகள் ஆழுக்கொரு பாத்திரத்தோடு  வயதுக்கேற்ற வரிசையாய் ஓடி வந்தனர்.

அப்போது மழை பொழிந்தது....

குழந்தைகளின் பத்திரங்கள் வானத்தை  நோக்கியே அண்ணாருகின்றன.

அந்த ஏழைத்தாயை வருத்திய துயரை நினைத்து வானமே அழுதது - ஆனால்
மனிதர்கள்..?..?...?

நெடுந்தீவு முகிலன்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

குண்டு மழைக்கு யார் குடை பிடிப்பது
இரத்தத்தில் நனைந்த இனம் நாம்.

எதிரிகளின் தாக்குதலினை முறியடித்தோம் - துரோகிகளின்
காட்டிக்கொடுப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டோம்.

குருவி சுட தெரியாதவனெல்லாம் எங்கள் குரல் வளைக்கு குறி வைக்க ஏங்கி நின்றோம்.

பிணங்களை கடந்து போகும் பயணத்திலும் பாதிப் பேர்
ஊணங்களாக்கப்பட்டுக்கொண்டே இடம்பெயர்தோம்.

தோட்டாக்களினதும் பீரங்கிகளிதும் சத்தத்துக்கு பாதிக்கப்பட்ட
நமக்கு நச்சு வாயு புது பாடமாகவே இருந்தது.

உடமைகளோடு ஓடி வந்தோம் - கொஞ்ச தூரத்தில் அவைகளை விட்டு உறவுகளோடு ஓடினோம் அதுக்கு பிறகு உயிரோடு மட்டுமே ஓடினோம்

சரணடைய கை தூக்கியவர்களும் பாதுகாப்புக்காய் வெள்ளை கொடி காட்டியவர்களும் சுடப்பட்டார்கள். எஞ்சியவர்களில் சந்தேகமானவர்கள் எல்லைகளில் வைத்தே களையப்பட்டார்கள்.

கடத்தி சென்றவர்களையே... காணாமல் போனவர்கள் என்று கேட்க்கின்றோம் - அது பழைய காக்கா பாட்டியை
ஏமாத்திய வடைக் கதை என...புதிய நரிகள் கதை சொல்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்
கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்
அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை
விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில் மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து
இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை
கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்
என் சாவுக்கு யாருமே சம்மந்தமுமில்லை
இது என் சுய விருப்பமே...

நான் நிரந்தரமாகவே உறங்க ஆசைப்படுகிறேன்

அவசரத்தில் எடுத்த முடிவு கிடையாது - ஆழ்ந்த
யோசனையின் பின் நான் எனக்கு கொடுக்கும் விடிவு

என்னை இறுதியில் என் ஊர்சாலை
வழியாகவே....கொண்டு செல்லுங்கள்.

எனக்காக எவரும் அழவேண்டாம் - நான்
எவ்வளவோ அழுதான் இந்த தீர்வுக்கே வந்தேன்

ஒரு வேளை சில....அனுதாப விழிகள்
எனக்காக அழதால் கைக்குட்டை கொடுத்து சமாளியுங்கள்.

எனக்காக மலர்வளையங்கள் வேண்டாம். வீணாய் பூக்களை கொலை செய்யாதீர்கள் - அதுகளாவது நின்மதியாய் ஒரு நாளாவது வாழட்டும்.

கண்ணீர் பதாதைகள் ஒட்ட வேண்டாம். - அண்ணாந்து பித்து தின்னும் பசுக்களின் குடலில் ஒட்டுவதோடு  பால் குடிக்கும் கன்றுக்குட்டிகளுக்கும் உபாதைகள் ஏற்ப்படக் கூடும்.

இது வரை என் வேதனைகளை வேடிக்கை பார்த்தீர்கள் - முடிந்தால்
நான் முடிவில் விட்டுப்போகும் எலும்புக் குவியல்களுக்காவது
சுதந்திரம் கொடுங்கள்.

நான் இந்த முடிவுக்கு முயற்சித்ததே.... அடுத்த பிறவி இருக்கு என்ற நம்பிக்கையில் அல்ல  என் நின்மதிக்காகவே - ஆனாலும் என் நின்மதி நிரந்தரமானதல்ல... எப்படியாவது நீங்களும் அங்கு வந்து விடுவீர்களே...


நெடுந்தீவு முகிலன்
அதிகாலையில் எழுந்து அடுப்பு பத்தவைத்து

சூடான தேநீர் தயாரித்து 
தலைமாட்டில் வைத்து

பிள்ளைகளை தடடித்தடவி எழுப்பி

பாடப்புத்தகங்களை எடுத்துக்கொடுத்து

கணவனின் உடைகளுக்கும் சேர்த்து ஸ்திரி போட்டு

மறுபடியும் அடுப்படியில் புகை ஊதி ஊதி காலை சாப்பாடும் சரி செய்து

குழந்தைகளை குளிப்பாட்டி உணவூட்டி உடுப்புடுத்தி

பள்ளிக்கு அனுப்பிவிட்டு

தண்ணீர் இல்லாவிட்டால் - மின்சாரம் தடைப்பட்டால் கணவனின் திட்டுகளையும் சமாளித்து

வீடு வளவு சுத்தம் செய்து

பழைய பாத்திரங்கள் கழுவி

வெயிலிலும் நடந்து சந்தைக்குப்போய் காய்கறி வாங்கிவந்து

உலையை கொதிக்க வைத்து 

ஊறவைத்த உடுப்புகளை  அலம்பி காயவிட்டு

சமையல் அறைக்கு ஓடிவந்து சாதம் ஆக்கிவிட்டு

குழந்தைகளை அழைத்து வந்து

ஆவி பறக்க பறக்க சாப்பாடு கொடுத்து

கணவனுக்கு போன் போட்டு 

மதிய உணவுக்கு வர அழைப்பு விட்டு

வராவிட்டால் - தானும் சாப்பிடாமல் இருந்துவிட்டு

குழந்தைகளை தூங்க வைத்து

பக்கத்து வீட்டு பெண்களை அழைத்து ஊர்க்கதை பேசி சமாவைத்து

மாலையில் காப்பியும் கொடுத்து கடிக்கவும் ஏதாவது கொடுத்து

ஒவ்வொரு குழந்தைகளாய் முகம் - கால் - கை கழுவி
சாமி கும்பிடவிட்டு

 அ - ஆ சொல்லிக்கொடுத்து

மறுபடியும் சமையல் செய்து

கட்டிலுக்கு கொசுவலையும் போட்டு
 தலையனையும் போட்டு

எல்லோருக்கும் சாப்பாடும் கொடுத்து

சந்தோசமாய் கணவனையும் கட்டிப்பிடித்து தூங்குவதற்க்கா..?..?

"கல்யாணத்துக்கு முன் பெண் வீட்டாரிடம் இருந்து லட்சம் லட்சமாய் வரதட்சனை வாங்கப்படுகின்றது"

நெடுந்தீவு முகிலன்
பாலுறுப்புகள் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே
தெரியும் புகைப்படமே ஒட்டப்பட்டிருக்கிறது - 

எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில் படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில் பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன் யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும் முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை நானகவே எடுத்து நீட்டுகிறேன்.

நெடுந்தீவு – முகிலன்
உன் பாதணிகளின் ஸ்பரிசத்தால் என் தேடுதல் ஒரளவு நிறைவுக்கு வந்தது.

நீ உள்ளே இருப்பதை காட்டிகொடுத்தது ஒட்டி பிறந்த குழந்தைகளாய் நெருங்கிக்கிடந்த உன் காலணிகளே...

சங்கீத வகுப்போ வழிபாட்டுக்கான ஒன்று கூடலோ ஏதோ ஒன்று அந்த அறைக்குள் வணக்கத்துக்குரியதாய் ப்பேறிக்கொண்டிருக்கிறது.
உன் பாதங்கள் பட்டு பூமி பெறப்போகும் பாக்கியத்தை இந்த பாதணிகள் பங்கிட்டுக்கொண்டிருக்கிறது.

நீ வரும் வரை காத்திருக்க பழகிய செருப்புகள் என் தவிப்பை ஒரு போதும் உனக்கு எடுத்து கூறாது...

நீயும் நானும் இந்த காலணிகள் போலவும் இதுவரை நெருங்கியும் இருக்கவில்லை....

உன் ஞாபகமாய் உன் பாதணிகளை களவாடி கொள்வதற்கு மனசுக்கு பிடிக்கவில்லை...

இதை சாட்டாக வைத்து யாரேனும் அவசரமாய் புது காலணிகளை உனக்கு பரிசளிக்க கூடுமே...

நெடுந்தீவு முகிலன்