நிறைய முகங்கள்
ஞாபகம் இருக்கிறது.
உன் முகம்
நிறைய ஞாபகம் இருக்கிறது.
நெடுந்தீவு முகிலன்
குழந்தையாகவாவது…
இருந்திருக்கலாம் - நீ
துக்கி அணைக்கும்
ஸ்பெசல் பிரியத்துக்காய்.
நெடுந்தீவு முகிலன்
காதலும் - ஒரு
வகையில் பண்டமாற்று
மனசைக்கொடுத்து
நினைவை வாங்குவதால்…
நெடுந்தீவு முகிலன்
யார் நடனம்
கற்றுக்கொடுத்தார்கள் - நீ
இறங்கிப்போன பின்னும்
நான் அரங்கில் நிற்கிறேன்.
நெடுந்தீவு முகிலன்
நீ இரக்கக்காரிதான்.
கேட்க்காமலே..
கொடுக்கிறாயே.. சோகங்களை..
நெடுந்தீவு முகிலன்
நீ என் நவீன
நாளிதழ் - ஆனாலும்
உம்முண்ணு இருப்பதே
என் தலைப்புச்செய்தி.
நெடுந்தீவு முகிலன்
அந்த நாட்களில்
உயிரோடு இருந்ததே – உன்
வார்த்தைகளை வாங்கி
வங்கியில் போடுதற்கு…
நெடுந்தீவு முகிலன்
கண்களும் துப்பாக்கி என…
கண்டறிந்த பின்புதான்
தெரிந்து கொண்டேன் - காதலும்
போராட்டம் என்று…
நெடுந்தீவு முகிலன்
எத்தனை முறைகள்
வில்லை உடைத்து – உடைத்து
களைத்து விட்டேன்
இது வரை இல்லையே
எனக்காக ஒரு சீதை
நெடுந்தீவு – முகிலன்
நீ எனக்காக ஓரு பொய் சொல்லு….
என்னைக் காதலிக்கவில்லை என்று….
நெடுந்தீவு – முகிலன்.
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
நீர்,காற்று, விலங்கு,வெடித்துச் சிதறி….
வித்துக்கள் இடம் பெயர்ந்து விருட்சங்கள் ஆகின்றன.
நீ…உனது பார்வைகளால் பரவல் அடைந்து நந்தவனமாகிறாய்.
நெடுந்தீவு-முகிலன்
திடிரென மின்சாரம் தடைப்பட அப்பா திட்டினார்
மின்சார சபையை... அம்மா ஓடினா பக்கத்துக் கடைக்கு
மண்ணெண்ணை வாங்க....(அப்பாக்கு பயந்தும்)
நான் யோசித்தேன் இப்போது உன்னை அழைத்து வரலாமென...
நெடுந்தீவு முகிலன்.
உன் காலில் செருப்பாக தேய்ந்து கொண்டிருக்கிறேன் - அதற்காகவா
வாசலிலே கழற்றிவிட்டுப் போகிறாய்.
நெடுந்தீவு முகிலன்
புதிது புதிதாய் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உன் பழைய ஞாபகங்களையே வைத்துக் கொண்டு...
.நெடுந்தீவு முகிலன்
புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டேன் - நீ
இருமிக்கொள்வதால்.
நெடுந்தீவு முகிலன்
இரவானதும் கூடு செல்லும் பறைவைகளாக இமை மூடியதும்
உன் கனவுகள் பறந்து வருகின்றன.
நெடுந்தீவு முகிலன்
நீ பூப்படைந்த போதே....
எனது கவிதைகளும் வயதுக்கு வந்தன.
நெடுந்தீவு முகிலன்
"தேனிகளுக்கு ஓர் அவசர அழைப்பு"
இதோ.... அவள் கூந்தல் உலர்த்துகிறாள்.
ஈரம் காயும் முன்னர் உறிஞ்சி விடுங்கள்....