வியாழன், 25 ஆகஸ்ட், 2011

உறக்கம் எனக்கு பிடித்த தபால்காரன்


முதல் சந்திப்புகளில் - நீ
வள்ளலாய் இருந்தாய்.
நிறைய நிறைய காதலைத்தந்து ....

என் விழித்தண்டவாளத்தில்
கனவுப்புகை வண்டி
விடியும் வரை ஊர்கிறது.
ஒரே ஒரு பயணிக்காய்..

நான் உறங்காத நாட்களை .... உன்னை
சந்தித்த நாட்க்களில் இருந்து
கழித்துப் பார்.

உன் வெட்கம் நீளமாகிப்போக போக..
என்காதலின் கனவளவுதான்
அதிகரிக்கின்றது.

எத்தனையோ பேராசிரியர்களை ..
கடந்த போதிலும் - உன்னிடம் தானே
நான் தழிழ் கற்றேன்.

அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் - நீ
ஒரே தடைவையில் கொடுத்திருக்கிறாய்.
"புன்னகைத்தபடி முறாய்த்துக்கொண்டு"

உறக்கம் தான் எனக்கு பிடித்த
தபால்காரன் - அவன் தானே
உன் கனவுகளை கொண்டுவந்து தருகிறான்.

நீ என் வரவை
மறுதலித்து கதவுகளை
மூடிய போதும் - இரக்கக்காரி என்று..
இனங்கண்டேன்.
ஜன்னலை மூட மறந்தாயே....

நெடுந்தீவு - முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக