ஞாயிறு, 23 ஜூன், 2013


நீ இப்போது எங்கே இருக்கிறாய் . தொலைபேசி அலறுகிறது
ஒரு தடைவையாவது தூக்கமாட்டாயா..?

தொலை பேசியை வீட்டிலே விட்டுவிட்டு - நீ வெளியே சென்று விட்டாயோ..?

வெளியே செல்வதாயின் - நீ யாருடன் சென்றிருப்பாய்.

ஒரு வேளை தொலைபேசியை கையிலே …வைத்துக்கொண்டு
யாரோடாவது உரையாடிக்கொண்டிருக்கிறாயோ..?

உனது உரையாடலிலாவது நான் ஞாபகப்படுவேனா…?..

நீ ஏன் எனக்கு ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

என்னை எங்கோ எறிந்து விட்டு…நீ காணமல் போனாய்.

காற்றில் உனது வாசனைகளை அனுபவிக்கிறேன்.
கனாக்களில் உனது வருகையை அவதானிக்கிறேன்.

இப்போதைய உனது தோற்றம் எப்படி இருக்குமோ…
மாற்றம் நிகழ - நான் காரணம் ஆனேனோ….?

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும் ...
துண்டித்தாவது விடுவாயா...?

உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக