ஞாயிறு, 23 ஜூன், 2013


இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு
பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.

நீ மழையில் நனைகிறாய் - அதுதான்
எல்லா குடைகளும் கம்பி எண்ணுகின்றன.

உன் விழியின் புருவத்தில்
ஐபுறோ பென்சில் பரீட்சை எழுதுகின்றது.

இரட்டை கூந்தலுக்குள் - ஒற்றை
பூவையாவது வைத்து வா பெண்னே
உன்னை வருட வரும் பட்டாம் பூச்சிகள்
கூட்டமாவது கொஞ்சம் குறையட்டும்.

உன்னோடு கை கோத்து நடக்கையில்
தெருவாவது கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா..?
உன் வீடேனும் எங்காவது ஊர்ந்திருக்கலாமே...

உன் கால்களை நனைத்து செல்கிறது
மழை நீர் - அதைத்தான்
தவளைகள் பருகிவிட்டு
போதையில் கத்துகின்றன.

உன்னை பார்த்த புழுகில் - கட்டிலில்
காலை மேலே உயர்த்தி
நான் தலை கீழாக நிற்க்கிறேன்
"வெளவால்கள் உன்னை - எப்போது
பார்த்து சென்றனவோ"

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக