ஞாயிறு, 23 ஜூன், 2013


மனம் நிறைய ஆசைகளோடு
ஊருக்கு போகின்றேன்.

பயறு சக்கரை வைத்து அவித்த
பல்லு கொழுக்கட்டையையோ...
குடிக்க மோரையோ மூக்குப்பேணியையோ...
றங்கு பெட்டிக்குள் கிடந்த
காணி உறுதியையோ...
பறண் அருகில் தொங்கிய
வெங்காய கூடையையோ...
துலா கிணற்றையோ இரட்டை மாடு
இழுக்கும் ஏர் கலப்பையையோ...
குறிஞ்சா கொடியையோ... அதை கொழுவி
இழுக்கும் கொக்கத்தடியையோ...
திண்ணையில் தண்ணி வைக்கும்
மண் பாணையையோ..
மண் பாணையை சுமக்கும் திருகணியையோ...
தோட்டத்து வாசல் மட்டை படலையையோ
பசளைக்கு போடும் ஆட்டுப் புழுக்கையையோ..

இதில் ஒன்னையுமே நான்
இப்போ பாக்கவில்லை - ஆனால்

வருசா வருசம் மட்டும்
மேள தாளங்களோடு கோயில்களில்
கொடியேற்றமும் கும்பாபிசேகமும் ஒப்போறிப்போகிறது..

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக