ஞாயிறு, 23 ஜூன், 2013

என் சகோதரியின் கணவன் ஒரு அன்னியனை
போலவே என்னை வரவேற்றான்.

நாற்க்காலியில் சாய்ந்து உட்க்காந்து எனக்காக - ஒரு
தேநீர் தயாரிக்க சகோதரியிடமே அறிக்கை விட்டான்.

எனது ஆடையின் பெறுமதியினை விசாரித்து கொண்டு - தனது
மேசை விரிப்பின் துண்டோடு சமப்படுத்தினான்.

சகோதரி என்னோடு உரையாடுவதற்கான எந்த
சந்தர்பத்தினையும் அவன் வழங்கவில்லை...

நான் புறப்படுவதற்கான கடைசி பேருந்தும் தயாராக
இருப்பதாக ஞாபகப்படுத்தினான்.

நான் எதை பற்றி பேசினாலும் அது அவனுக்கு
வன்மமாகவே இருந்தது.

போய் வருகிறேன் என்னும் போதே - மரியாதை
கொடுத்து என்னை அனுப்பி வைத்தான்.

கடைசி வரை எனது சகோதரியினை அன்று
நான் சந்திக்கவேயில்லை...

சகோதரியினை பார்க்க புறப்படுவதற்கு தயாராகி
கொண்டிருக்கும் என் தாய் தந்தையின் நிலை என்னவோ...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக