ஞாயிறு, 23 ஜூன், 2013

எனக்கும் ஒரு தாய் இருந்தாள்.

பாழ் அடைந்த வீட்டையும்...
கட்டி அவிழ்த்த கந்தல் துணிகளையும்...
தாய் நாட்டையும் எனக்காக விட்டிருந்தாள்.

தாய் நாட்டை தவிர எனக்கு
தந்தையோ சகோதரா்களோ
இருந்ததாக ஒரு போதும் சொல்லிவைக்கவில்லை...

எனது தாயின் விருப்பம் போவலே
என் தாயையும் தாய் நாட்டிலேயே புதைத்தேன்.

என் தாயை புதைத்த என் தாய் நாட்டிலே
என்னையும் புதையுங்கள்.

மண்ணுக்குள்ளேயாவது எமக்காக
ஓா் நிரந்தரமான தாய் நாடு இருக்கட்டும் .

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக