ஞாயிறு, 23 ஜூன், 2013

கூரைகள் மேயப்படாவிட்டாலும்
பெயரளவில் - இதுவும்
பிரயாணிகளுக்கான
பேரூந்து நிலையம்.

மழைக்காலங்களில்
நனைந்து கொள்வதும்
வெயில் காலங்களில்
காய்ந்து கொள்வதும்
பயணிகளுக்கு பரீட்சயமாகிவிட்டது.

புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது என
கொட்டை எழுத்துகளில்
பொறிக்கப்பட்டிருக்கும்
பெயர்ப்பலகையில்
படிந்து கானப்படுகிறது.
புகையின் படலம்

ஆலடிப் பிள்ளையாருக்கு
கோபுரம் கட்ட
அரோகரா சொல்லிக்கொண்டு
அடியார் ஒருவர்
வீபூதி தட்டோடு
சில்லறை கேட்டபடி

வயிற்றுப் பசிக்காய்
கையை நீட்டி வரும்
ஏதோ ஒன்று
முடமான மனிதர்கள்.

சகிக்க முடியாத – அந்த
சல்லடைகளுக்குள்ளும்
சலனமில்லாமல்
தோளில் கைபோட்டு
பேசிக்கொண்டிருக்கும்
காதல் யோடிகள்

குன்றும் குழியுமான
அந்த சுற்றுப்புறத்தில்
தெரு நாய்களின்
திருமன வைபோகம்

அரைகுறையான ஆடைகளோடு
ஆங்கில கலாசார
அழகிகளின் நடமாட்டம்.
“தமிழ் பேசிக்கொண்டே”

மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலத்திலும்
திருத்தப்படவில்லையே என…..

நெடுந்தீவு – முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக