ஞாயிறு, 23 ஜூன், 2013


வருகிற.. புது வருடத்தை முன்னிட்டு நானும் மனைவியும் குழந்தைகளுமாக - ஒவ் ஒரு புடவைக்கடைகளாய் ஏறி இறங்கினோம்.

எத்தனை கடைகள் என்று - அன்னளவாக
இப்போது எனக்கு ஞாபகம் இல்லை.

மூத்தவள் - கலர் பிடிக்கவில்லை என்று...
முணுமுணுத்தாள்.

இளையவள் - இது மொடலிங் இல்லை என்று ...
மூஞ்சியை திருப்பி உம்முண்ணு இருந்தாள்.

அடுத்தது – அக்காட மாதிரியே எனக்கும் என்று...
அழுதழுது அடம்பிடித்தது.

கடைசி என் கையைபிடித்து அடிக்கடி இழுத்தது.
அடுத்த கடைக்கு போவோம் என்று...

எல்லோரையும் விட – மனைவி
அலுப்பு கொடுத்தாள்.
அது பிடிக்கிதா...?...இது பிடிக்கிதா..?..
என்று ...கேள்விகளை எழுப்பி...

ஏதோ எல்லோருக்கும் ஒவ்வொன்று
வாங்கிக்கொண்டு - வீடு திரும்புகையில்
இரவாகிவிட்டது.

"காலையில் யாரோ - ஒருவனின் அம்மா
வருகிறா... "

வயதாகிப்போன அம்மா தானோ என்று ....
நான் வாங்காமல் விட்டு வந்த – அந்த
வண்ண பட்டு புடவையைக் கட்டிக்கொண்டு.....

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக