ஞாயிறு, 23 ஜூன், 2013

எல்லோரினது உறக்கத்தின் பிறகே எலிகளின்
ஆட்சிக்கு உட்ப்படுத்தப்படுகிறது. எங்கள் வீடு.

கதவருகில் யன்னல் கம்பியில்
சாமிப்படத்திற்கு பின்னுக்கு சாப்பாட்டு மேசையில்
கட்டிலுக்கு கீழே ... என்று எல்லா பகுதிகளும்
எலிகளின் கூத்து மேடையாகி விட்டன.

பாட்டியின் மரண சாண்றிதழில் பாதிதான்
சாப்பிடப்பட்டிருந்ததாயினும் அடிப்பெட்டியில்
கிடந்த அக்காளின் கல்யாண சான்றிதள் காலியாகி இருந்தது...

தம்பி இரவில் கத்துவான் எலி எலி என...
அப்பாவோ தூக்கத்தில் பிதற்ருகிறான் என்று அயந்து விடுவார்.

எலிகளில் உடல் உறவுகளும் பிரசவமும்
எனது புத்தக அலுமாரிக்குள்ளே ஒப்பேறியிருக்கின்றன.

காலையில் வீடு முழுவதும் எலிகளில் மலம்
கறுப்பு நெல்லாய் விதைக்கப்பட்டிருக்கும்.

இரவில் தானே வேலைக்கு கிளம்புகின்றன - பகலில் இந்த எலிகள்
எங்குதான் பதுங்கியிருக்கின்றனவோ...

எலிகள் மனிதர்களை போல் இல்லையே..
பயமில்லாமல் பகலிலும் திருடிகொள்வதற்க்கு...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக